Friday, October 26, 2012

சிறுவனின் கண்டு பிடிப்பு! - தினமணி, 25-10-2012


நம் காது ஜவ்வுகளைக் கிழிக்கும் அளவில் ஒலிக்கப்படும் எச்சரிக்கை மணியை (ஹாரன்)  முதன் முதலில் கண்டு பிடித்தது யார் தெரியுமா? எச்சரிக்கை மணியைக் கண்டு பிடித்தது ஒரு சிறுவன என்றால் உண்மையில் ஆச்சரியம் தானே.

ஆம் ! அமெரிக்காவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையைச் சிறுவன் ஒருவன் கடந்து கொண்டிருந்தான். அப்போது திடீரென்று ஒரு குதிரை வண்டி அதி வேகமாக அவனைக் கடந்து சென்றது.

சிறுவன் மயிரிழையில் உயிர் தப்பினான். ஆனால் அந்த சிறுவன் வீட்டிற்குச் சென்ற பிறகு அந்தச் சம்பவத்தை நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளானான்.

மோட்டர் வண்டிகள் இல்லாத அந்த காலத்திலும் குதிரை வண்டிகள் அதிகமாக இருந்ததால் அந்தப் பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும். இதனால் அந்தச் சாலையில் நடந்து செல்லும் பயணிகள் வேகமாகச் செல்லும் குதிரை வண்டிகளால் அடிக்கடி விபத்திற்குள்ளாகினர். இதனால் இந்த விபத்துகளைத் தடுக்க ஒரு எச்சரிக்கைக் கருவி இருந்தால் நன்றாக இருக்கும் என்று அந்த சிறுவன் நினைத்தான்.

உடனே கடினமாக உழைத்து மணி போல ஒரு கருவியை உருவாக்கினான். அந்த கருவியிலிருந்து கணீரென்று ஒலி வந்தது. இதுதான் அவனின் முதல் கண்டுபிடிப்பு. அதைக் குதிரை வண்டிகளில் எச்சரிக்கை மணி போல பொருத்தினான்.

சிறுவனின் தொடர் ஆராய்ச்சியால் உருவானது தான் பாதுகாப்புக் குண்டூசியும், ஊற்றுப் பேனாவும். இந்த சிறுவன் தான் பிற்காலத்தில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாளரான வால்டர் ஹன்ட்.                                              

நன்றி:- தினமணி, 25-10-2012




0 comments:

Post a Comment

Kindly post a comment.