Friday, September 21, 2012

நீதி இலக்கியங்கள் :- தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் இரா.செல்வக் கணபதி

தில்லித் தமிழ்ச் சங்கமும், "தினமணி'யும் இணைந்து நடத்திய அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில் "தமிழ் இலக்கிய சிந்தனைகள்' எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில்  "நீதி இலக்கியங்கள் எனும் தலைப்பில் பேராசிரியர் இரா.செல்வகணபதி பேசியதாவது:

 
 தமிழில் அறத்தை வலியுறுத்திய நூல்களே அறநூல்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த அறநூல்கள் திருவள்ளுவர் விரிவாகக் கூறியதைக்கூட மிக எளிமையாகக் சுருக்கமாக யாவரும் விளங்கத்தக்க வகையில் கூறியிருப்பது அவற்றின் சிறப்பாகும்.

 ஒüவையார் அறஇலக்கியப்பாதையில் புதிய வழிகண்ட சிறப்புக்குரியவராக விளங்கினார். நல்ல பாதையில் தமிழர்களாகிய நாம் நடைபோடும் வகையில் சங்ககாலம் முதலே அறஇலக்கியங்கள் இருந்துள்ளன.

அறத்தை திருவள்ளுவரே தெளிவாக கூறாத நிலையில், ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல் பொருள், என உறுதியாக எடுத்துக்காட்டியவர் ஒüவையார். ஆத்திசூடி உள்ளிட்ட நூல்கள் மூலம் அறத்தை மிக எளிமையாக நமக்கு விளக்கியிருக்கிறார் அவர்.

 நீதிநெறி நூல்கள் விதைக்கப்படவேண்டிய குழந்தைகள் மனதில் விஷம் போன்ற பல தவறான கருத்துகள் விதைக்கப்படுவது வேதனையளிக்கிறது என்றார் பேராசிரியர் செல்வகணபதி.

தில்லித் தமிழ்ச் சங்கமும், "தினமணி'யும் இணைந்து நடத்திய அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில் கலந்து கொண்ட ஒரே தமிழ் வலைப்பதிவர் தொகுத்தது.

நன்றி, தினமணி, புதுதில்லி, 16, செப்டம்பர், 2012



0 comments:

Post a Comment

Kindly post a comment.