Friday, September 7, 2012

கிராம வங்கி ஊழியர்களுக்கு வணிக வங்கி ஊழியர்களுக்கு இணையான பென்ஷன் வழங்க அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது!









நன்றி :-

http://www.pgbea.net/2012/07/pgbea-pgbou-circular-102012-dt-30072012.htm


சுற்றறிக்கை எண்: 10/2012         நாள்: 30.7.2012

அருமைத் தோழர்களே!

கிராம வங்கி ஊழியர்களுக்கு வணிக வங்கி ஊழியர்களுக்கு இணையான பென்ஷன் வழங்க அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது!

இது சாதாரண செய்தியல்ல. 1980களின் ஆரம்பத்தில்  'சம வேலைக்கு சம ஊதியம்' என கோரிக்கை வைத்து, 1990களின் ஆரம்பத்தில் வணிக வங்கிக்கு இணையான ஊதியம் பெற்று வந்த நமக்கு ஒரு பெருங்குறை இருந்தது. அது பென்ஷன். வணிக வங்கி ஊழியர்களுக்கு இணையாக நமக்கு அரசு வழங்கிடவில்லை. அடுத்தக் கட்டம் போராட்டம் ஆரம்பமாகியது. இதோ 2020களின் ஆரம்பத்தில் அது நம் அருகில் நெருங்கி வந்திருக்கிறது. ஆக, ஒரு 30 வருட வரலாறும், பின்னணியும் இந்த செய்திக்கு உண்டு. இதனை சாத்தியமாக்கிய பெருமையும், வரலாறும் AIRRBEAவையேச் சேரும். அப்படி ஒரு வீரியத்தோடும், விடா முயற்சியோடும் போராடியது AIRRBEA. இதனை யாரும் மறுத்திட முடியாது.

கிராம வங்கி ஊழியர்களுக்கு வணிக வங்கி ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல ஒரு Pension schemeஐ உருவாக்குமாறு,  இப்போது நபார்டுக்கு பொறுப்பு அளித்திருக்கிறது நிதியமைச்சகம். Pension scheme உருவாக்கப்பட்டவுடன்  அதற்கு ஒப்புதல் அளித்து அரசு ஆணை பிறப்பிக்கும். அதன் பிறகு ஒவ்வொரு வங்கியின் நிர்வாகக் குழு (BOARD of Directors)வில் வைத்து அந்தந்த கிராம வங்கிகளில் அமல்படுத்தப்படும்.   ‘Loss making RRBகளுக்கு கிடையாது, employees sharing 30% இருக்க வேண்டும்' என்கிற நிபந்தனைகளை  அரசு விதித்துக்கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. அவைகளையும் AIRRBEA சரிசெய்யும். அதற்கான திட்டங்களும், பார்வைகளும் AIRRBEAவிடம் இருக்கின்றன.
 ,

ஒரு பெருங்கனவு நிறைவேற இருக்கிறது. அதனைக் கொண்டாடுவோம்.

காலம் கனிந்திருக்கிறது. அதனை கைவசப்படுத்துவோம்.

ஒரு விரிந்த தளத்தில் நாம் அனைவரும் சங்கமிப்போம்.






0 comments:

Post a Comment

Kindly post a comment.