Friday, September 7, 2012

ஜாம்பஜார் காவல் நிலயத்தில் 25 பவுன் நகையை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் செந்தில் !


சென்னையில் ஆட்டோவில் பெண் தவறவிட்ட 25 பவுன் நகையை டிரைவர் மீட்டுக் கொடுத்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது:

இராயப்பேட்டை ஐயா பிள்ளைத் தெருவைச் சேர்ந்த அபீப் மனைவி நூர்ஜஹான் (35). இவர் வியாழக்கிழமை இரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ராயப்பேட்டைக்கு ஆட்டோவில் சென்றார்.

அப்போது அவர் கையில் வைத்திருந்த ஒரு பையில் ரூ.5.50 லட்சம் மதிப்புள்ள 25 பவுன் நகையை எடுத்துச் சென்றார்.

வீட்டுக்கு சென்ற பின்னர், தனது பையை அவர் தேடியுள்ளார். ஆனால் பையை மறந்து ஆட்டோவில் விட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே, இது குறித்து ஜாம்பஜார் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

இந்நிலையில் ஆட்டோ டிரைவர் ர.செந்தில் (34) அந்த பையை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

உடனே நூர்ஜஹான், தனது நகையைப் சரிபார்த்தார். இதில் அவரது நகை அனைத்தும் இருந்ததாம்.

நகையை மீட்டுக் கொடுத்த ஆட்டோ டிரைவர் செந்திலின் நேர்மையை நூர்ஜஹான் குடும்பத்தினரும், காவல்துறை அதிகாரிகளும் பாராட்டினர்.


நன்றி :- தினமணி,  07-09-2012, வெள்ளிக் கிழமை.

0 comments:

Post a Comment

Kindly post a comment.