Wednesday, April 25, 2012

மின்சாரக் கட்டணம் தனியார் துறையின் வேட்டைக் காடு!

திருவள்ளுவன் இலக்குவனார் thiru2050@gmail.com
  
23 Apr (2 days ago)
      
to thiru, bcc: keetru
---------- Forwarded message ----------
From: sk natarajan


---------- Forwarded message ----------
From: apollo parthiban

பல வருடங்களுக்குப்  பிறகு தமிழகத்தில் மின்சாரல் அதிகரிக்கப்பட்டுள்ளது.   மின் கட்டணம் உயர்த்தப்பட்டது  பற்றி சட்டமன்றத் தில் கேள்வி எழுந்த‌போது முதலமைச்சர்” TNERC என்கிற அமைப்பு தான் மின் கட்டண த்தை உயர்த்தி உள்ளது. தமிழக அரசு அல்ல. எனவே நாங்கள் ஏதும் செய்ய முடியாது  என்று கூறினார். இதை நடந்த‌ அடுத்த இரண்டு நாட்களில்  மின் கட்டணம் குறைக்கப்படு வதாக முதல மைச்ச‍ர்  என அறிவித்தி ருக்கிறார்..  கட்ட‍ணத்தை உயர்த்து வது மட்டும் TNERC ஆம். அதை குறைப்பது தமிழக முதல்வராம் ! ( TNERC  நிர்வாகத் தலைமை யார் கட்டுப்பாட்டில் உள்ளது ? )

சரி புது  Tariff என்ன என்று பார்ப்போம்

இது தமிழக அரசு முதலில் அறிவித்த மின் கட்டண  Tariff:

பிரிவு :1 : up to 100 – 0 to 100 Rs.1 .10
பிரிவு :2 : up to 200 – 0 to 200 Rs.1.8
பிரிவு :3 : up to 500 – 0 to 200 Rs.Rs.3 and 201 to 500 Rs.3 .50
பிரிவு :4 : Above 500 – 0 to 200 Rs.3 and 201 to 500 Rs.4 and 501 and above Rs.5.75

இது பின்னர் குறைத்து அறிவிக்கப்பட்ட Tariff

பிரிவு :1 : up to 100 – 0 to 100 Rs.1
பிரிவு :2 : up to 200 – 0 to 200 Rs.1.5
பிரிவு :3 : up to 500 – 0 to 200 Rs.Rs.2 and 201 to 500 Rs.3
பிரிவு :4 : Above 500 – 0 to 200 Rs.3 and 201 to 500 Rs.4 and 501 and above Rs.5.75

இந்த புது Tariff-ன் படி

உங்கள் வீட்டில் 100  யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 100 என வரும். (  இதற்கு முன் கட்டிய   பில் ரூ.65  )

200  யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 300 வரும்.(  இதற்கு முன் கட்டிய   பில் ரூ.220  )

300  யூனிட்டுகள் எனில் உங்கள் பில் ரூபாய் 700 வரும். (  இதற்கு முன் கட்டிய   பில் ரூ.440  )

400  யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 1000 வரும். (   இதற்கு முன் கட்டிய   பில் ரூ.660  )

500  யூனிட்டுகள் எனில் உங்கள் பில் ரூபாய் 1300 வரும். (  இதற்கு முன் கட்டிய   பில் ரூ.880  )
***

இனி தான் இருக்கு நிஜ ஷாக். நாம் EB  பில் கட்டுவது இரண்டு மாதத்துக்கு ஒரு முறை. என வே நம்மில் பலர் வீட்டுக்கு ஒவ் வொரு இரு மாதமும் யூனிட்டு கள் ஐந்நூறுக்கு மேல் தான் வரும். இந்த Category-க்கு விலை உயர்வில்  எவ்வித  சலு கையும்  செய்யப்படவில்லை !  மின் கட்டணம் குறைக்கப்பட வில்லை.

இவர்களின் பில்லை பாருங்கள் :

600 யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 2375 வரும்.  (  இதற்கு முன் கட்டிய   பில் ரூ.1100  )

700  யூனிட்டுகள் எனில் உங்கள் பில் ரூபாய் 2950 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.1500  )

800  யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 3525 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.1900 )

900  யூனிட்டுகள் எனில் உங்கள் பில் ரூபாய் 4100 வரும். (   இதற்கு முன் கட்டிய   பில் ரூ.2300  )
***
எங்கள் வீட்டை எடுத்து கொள் ளுங்கள் நாங்கள் சராசரியாக  அறுநூறு  யூனிட் செலவு செய் கிறோம். இதுவரை ரூபாய் 1100 -ஆக இருந்தது எங்கள் பில். இப்போது அது 2375  ஆக இருக்கும் ! 100 % க்கும் மேல் !

இத்தனைக்கும் மூன்றே பேர் இருக்கிறோம் என்பதோடு, ஒரு ஏ. சி அதுவும் இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஓடுவதில்லை. சற்றே பெரிய குடும்பம் எனில் எவ்வளவு யூனிட் ஓடும் என எண்ணி பாருங்கள் !

இதை விட க் கொடுமை 490 யூனிட் உபயோகிப்பவருக்கும், 501 யூனிட் உபயோகிப்பவருக்கும் உள்ள வித்யாசம் !

490 யூனிட் உபயோகிப்பவர் பில் : 1270

அதை விட பத்து யூனிட் அதிகமாக, 501 யூனிட் உபயோகிப்பவர் பில்: 1804 !! இன்னும் சொல்ல வேண்டுமானால், 500 லிருந்து 501 ஆனாலே, ஒரு யூனிட் உயர்வுக்கு குறைந்தது ஐநூறு ரூபாய்க்கு மேல் அதிகம் கட்ட வேண்டும் !!

மக்களை மிக மோசமாய் discriminate செய்வதற்காக  ஏன் இன் னும் உயர் நீதி மன்றத்தில் யாரும் பொது நல வழக்குத் தொடராமல் உள்ளனரோ 

தெரியவில்லை. ?

எனக்கு தெரிந்த வரை உங்களில் பலரின் யூனிட்டுகள் 500-க்கு மேல் தான் இருக்கும். உங்கள் வீட்டில் ரெண்டு பெட்ரூம், ஒரு பிரிட்ஜ், ஒரு டிவி, ஒரு
ஏ. சி இருந்தால் உங்கள் வீட்டில் யூனிட்டுகள் 500-க்கு மேல் எளிதில் வந்து விடும் ! நான் சொன்ன வீட்டு உபயோகப் பொருட்கள் சாதாரண மிடில் கிளாஸ் வீட்டில் இருக்க கூடிய விஷயங்களே !

இந்நிலையில் எப்படித்தான் முதல்வர் வெறும் 30 % தான் மின் கட்டண உயர்வு என்கிறாரோ? பில் கட்டுவோர் அதே EB கார்டை தான், எடுத்து செல்ல போகி ன்றனர். அப்போது சென்ற மாதங்களுக் கும் இம்முறைக்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கிட மாட்டார் களா?

எனக்குத் தெரிந்த வரை இதுவரை யாரும் தங்களுக்கு என்ன அளவு பில் வரும் என தீவிரமாய்க்  கணக்குப் பார்க்க வில்லை ! அப்படிச் செய் தால் தான் அவர்களுக்கு ஷாக் அடிக்கும் !! உங்கள் வீட்டுக்கு எவ்வளவு யூனிட் வழக்கமாய் வரும் என்பதைப் பார்த்து உங்களுக்கு நீங்கள் கணக்கிட்டு பாருங்கள் !

இன்னொரு முக்கிய விஷயம். ஏப்ரல் முதல் தான் இந்த மின் உயர் வு அமலில் வந்துள்ளது. உங்களுக்கு மார்ச், ஏப்ரல் இரு மாதங்களு க்கான பில்லை பார்த்தால் முழு பாதிப்பும் தெரி யாது. காரணம் மார்ச் மாதம் பழைய ரேட்டும், ஏப்ரல் புது ரேட்டிலும் இருக்கும். அடு த்த சைக்கிள்   மே & ஜூன் )வரும்போது தான் அதன் முழு effect தெரியும் !

எனக்கு தெரிந்து நண்பர்கள் பலரின் வீட்டில் (குறைந்தது பத்துக்கு இருவர்!)  ஈ. பி மீட்டர் வேலை செய்வதில்லை. அவர்கள் மினிமம் பில் தான் எப்போதும் கட்டுகிறார்கள். இவர்கள் இதனால் ஏ. சி போன்றவ ற்றை நிறுத்தாமல் ஓட்டுகிறார்கள். இரு மாதத்துக்கு ஒரு முறை கரண்ட் பில் எழுத வருபவர் இந்த மீட்டர்களை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுப் பதில்லை.

போலவே ஆட்சி எதுவாயினும் ஒவ்வொரு அரசியல் மீட்டிங், கோயில் விழா இவற்றுக்கு தெரு முழுதும் வண் ணவிளக்குகள் போட்டு அமர்க்களப் படுத்துகின்றனர். அனைத்தும் திருட்டு கரண்ட் !

இப்படி ஓடாத ஈ. பி மீட்டரை சரி செய்து, மின் திருட்டையும் சரி செய்தாலே அரசுக்கு ஏராளமாய் வருமானம் வரும். ஆனால் அரசுஇவ்விஷயத்தில் திருடர்களை விட்டு விட் டு, ஒழுங்காய் பில் கட்டுவோரை தான் தண்டி க்கும் !

மொத்தத்தில் : உங்கள் வீட்டு பில் 500 யூனி ட்டுக்கு மேல் போகாத படி பார்த்து கொள்ளு ங்கள். எப்படி என கேட்காதீர்கள். சிரமம் தான் ! இல்லை எனில் உங்கள் பட்ஜெட்டில் சில ஆயிரங்களை எக்ஸ்ட் ராவாக மின் கட்ட ணத்துக்கு தயார் செய்து வைத்து கொள்ளுங்கள் !
--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

மின்சாரக் கட்டணம்  தனியார் துறையின் வேட்டைக்காடு  - என்னும் தலைப்பில்  சா. காந்தி என்பவர் 44 ப்க்கங்களில்  சிறு நூல் ஒன்றினை எழுதியுள்ளார்.   

அவர் 37 ஆண்டுகளாக தமிழ்நாடு மின்வாரியத்தில்  பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

28 ஆண்டுகளுக்குமேல்த் தமிழ்நாடு மின்வாரியப் பொறியாளர் சங்கத்தின்  தலைமைப் பொறுப்பில்  இருந்தவர்.

தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பில் 2005-ஆம் அண்டிலிருந்து தலைவராக இருந்தும் வருகின்றார்

1957-லிருந்து 2003 வரையிலான 46 ஆண்டுகளில் அனைத்து வாரியங்களும் சேர்ந்து  சந்தித்த இழப்பு 41,400 கோடி. என்று கூறுகின்றார்.

மக்களுக்குச் சேவையாக மின்சாரத்தை விநியோத்த காலத்தில் அவை சந்த்தித இழப்பு இது.

தமிழ்நாடு வாரியம் 1970 கோடி அளவுக்குக் கடன்பத்திரங்களை வெளியிட்டது.. இந்தக் கடன் அடைபட்டதாகவே கட்டுரையாளர் அறிவிக்கின்றார்.

அனாஇ  மின்சாரச் சட்டம்  2003 வந்த பத்தாண்டுகளுக்குள்ளாகவே, அனைத்து விநியோக நிறுவனங்களும், 1,16,089 கோடி நட்டத்தை ஈட்டியிருக்கின்றன.

48 ஆண்டுகளில் ரூ.41,400 கோடி என்பதும். 10 ஆண்டுகளில் ரூ.1, 16, 089 கோடி என்பதும் ஒப்பிட முடியாத முரண்பாடுகள் என்பது யோசிக்க வேண்டிய சமாச்சாரம்.

தனியாரிடம் போடப்பட்ட மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களே  காரணம்!.
எதிர் வருமாண்டுகளில் வாரத்தின் நட்டம் 53, 298 கோடி, அதாவது அஅச்சகம் சொல்வதில் கிட்டத்தட்ட சரிபாதி!

RICH RULE THE LAW
LAW THE POOR

முழு விபரங்களும் தெரிந்து கொள்ள ஆர்வமுடையோர் அணுக வேண்டிய முகவரி:-

தமிழ்நாடு மிந்துறைப் பொறியாளர்கள் சங்கம்,

45/ 28 பாலகுரு கார்டன், பீளமேடு, கோவை-641004

போன் 0422 - 2599655  மொபைல் :- 9443003111  .










0 comments:

Post a Comment

Kindly post a comment.