Wednesday, April 11, 2012

மும்பை மதிய இதழும், தாதாக்களும்,, காவலர், பத்திரிக்கையாளர் கொலையும்!

 மகாராஷ்ட்ரா மாநிலத்தின்  தலைநகரமாய்த்  திகழ்வது  மும்பை.  அங்கு  சென்றவர்கள்  அனைவரையும்  கவர்ந்திழுக்கக்  கூடிய  ஒரு  பத்திரிகை  ”மிட்  டே.”  இது, 


26-09-1979 முதல் வாரத்திற்கொரு  முறையாக  வெளிவரத் துவங்கியது.  பின்னர்,  26-07-2007  முதல்  தினசரி  மதியம்  வரத்  துவங்கியது.  The Inquilab  உருது  மொழியில்  முதன் முதலில்

வந்த   பத்திரிகையாகும்.   அதன்  பின்னர் வருகின்ற  பத்திரிகைகளில்  “ மிட்  டே“  ஒன்றுதான்  உருது,  ஆங்கிலம்,  குஜராத்தி   ஆகிய மொழிகளில்  தொடர்ந்த் வந்து கொண்டிருக்கின்றன.

 ஜெகன்  பிரகாஷன் லிமிடெட்  மற்றும் மிட் டே இன்ஃபர்மேஷன்  லிமிடெட்  கம்பெனிகளின்  கீழ்  பதிவு செய்யப்பட்டுள்ளது.  மும்பை  ஸ்டாக்  எக்சேஞ் மற்றும்  மும்பை  ஸ்டாக்  எக்சேஞ்  ஆப்  இந்தியா  குறித்த செய்திகளும் இவற்றில்  வருகின்றன.

தேசிய   மற்றும்  அனைத்துலகச்  செய்திகள்,  உணவு  மற்றும்   உடல் நலம்,  சுற்றுலா  மற்றும்  விளையாட்டுத்துறை, செக்ஸ்  மற்றும்  சுவையூட்டக்கூடிய பல்வேறு

அம்சங்களுடன்   கூடிய  தகவல்களுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்தியா  முழுவ்தும்  பார்க்கப்  போனால்,  காலையிலும்,  மாலையிலும் வரக்  கூடிய  பத்திரிகைகள்தான் 

உள்ளன.ஆனால் மதியம் மட்டும் வரக்கூடிய பத்திரிகை இது ஒன்றுதான்..  அண்மையில் இதன்  மூத்த பத்திரைக்கயாளர்  மர்மமான முறையில் சுட்டுக் கொன்றபின்னர்  இந்தப்  பத்திரிக்கையின் முக்கியத்துவம்  இந்தியா முழுவதும் அதிகரித்தது.


ஜோதிர்மைய்  டே  மூத்த பத்திரைகயாளர். மிட் டே பத்திரிகையின் மூலம் நிழல் உலக  தாதாக்களின்  நடவடிக்கைகள  அம்பலப் படுத்தியவர், 2011 ஜுன் மாதம் 11 தேதி தீவிரவாதிகளால்  துப்பாக்கியால்  சுட்டுக்  கொல்லப்பட்டார்.  பயங்கரவாதிகள் குறித்து  எழுதி வந்ததுதான் அவர் கொலை செய்யப்பட்டதற்கு  பின்னணியாக இருக்கலாம் என்று போலீச்சார்  கருத்தாக இருந்தது.

 வன விலங்குகளில்  வசிக்கும்  காடுகளில்  நடந்த காடுகளில் நடந்த குற்றங்களை ஆஃப்டர் நூன் டெஸ்பாட்ச் மற்றும்  கொரியர் பத்திரிகைகள் 
வாயிலாக வெளிக்கொண்டு வந்த பத்திரிகயாளராக   (ஃப்ரீலேன்சர் ) தனது பத்திரிகை வாழ்க்கயைத்  தொடங்கியச்வர். ப் ரீலேன்ஸ் ப்ச்த்திரிகையாளராகச் சேர்ந்த சிறிது காலங்களுக்குப் பிறகு 1996-ல் இந்திய எக்ஸ்பிரஸ்சில்  சேர்ந்தார். மும்பை நிழல் உலகக் குற்றங்களைக் குறித்து எழுதலானார். பின்னர் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு வந்து  அங்கிருந்து  மீண்டும் மிட் டே வுக்கே  திரும்பினார். அங்கே  குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆசிரியராகப் பணியாற்றினார்.


இரண்டு புத்தகங்கள் ;-

ஸீரோ  டயல். உளவாளிகளின் பயங்கர உலகம் என்ற தலைப்புகளில் நிழல் உலக தாதாக்களைப் பற்றி இரண்டு புத்தகங்களை எழுதினார். பிரபல தாதாக்களான  தாவூத்  இப்ராஹிம், சோட்டா ராஜன்  ஆகியோரைப்பற்றியவைதான் அவை.

நூத்ன திருட்டு :-
பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களைக்  கடத்தி அதிலிருந்து ஒரு பகுதியைத்க் திருடி மீதமுள்ளதைக் கலப்படம் செய்து  விற்பனைக்கு அனுப்புவது. இதனை இவர்கள் பகிரங்கமாகச் செய்து வருகின்றனர். சட்டம் இவர்களுக்குக் குறுக்கே நிற்பதில்லை.  தடுக்க முயலும் நேர்மையான அதிகாரிகள்  தாதாக்களால்  மிரட்டப் படுவதுவதும்,  அல்லது கொல்லப்படுவதும் அவ்வபொழுது நடந்துவரும் செயலாகும்.

யஷ்வந்த் சோணாவனே  கொலை.:-  இப்படி ஒரு சம்பவத்தில் ஜனவரி 21, 2011-ல், மலேகான் மாவட்டத்தில், கூடுதல் கலெக்டராக இருந்த,  யஷ்வந்த்  சோணாவனே என்பவர்  நாசிக்கில் பயங்கரவாதிகளால் எரித்துக் கொள்ளப்பட்டார்.  இந்த  எண்ணெய்  உலகப் பயங்கரவாதிகளை உலகுக்கு  வெளிச்சம்  போட்டுக்  காட்டியவர், டே.

மற்றொரு விஷயத்தில் தாவூத் இப்ராகீமின்  தம்பியைக் கொல்ல நடந்த சதியின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவன்  சோட்டா ராஜன்  என்பதைக் கண்டு பிடித்துச் சொன்னவர் டே.

ஏழு  பேர் கைது:-  டே கொல்லப்பட்டு 16 தினங்களுக்குப்பின்  மும்பை  ஷோலாப்பூர் , தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் ஆகிய இடங்களிலிருந்து  7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் கோட்டாராஜனின் கூட்டாளிகள் என்பதும், இவர்களில் சதீஷ் காலியா என்பவந்தான்  டேயைக் என்பதும் தெரிய வந்துள்ளது.

நாம் வலைப்பூ பதிவர்களாக இருந்தாலும்,  விக்கிபீடியா பயனர்களாக இருந்தாலும் உயிரைக் கொடுத்தும் உண்மையை உலகிற்குக் கொண்டுவந்த, ஜோதிர்மய் என்ற  மாம்னிதனிதனுக்கு  - பத்திரைக்கையாளருக்கு அஞ்சலி  செய்வதற்காகவேனும் இக்கட்டுரையை  இடம் பெறச் செய்வோமாக! 





 




.

0 comments:

Post a Comment

Kindly post a comment.