Thursday, March 29, 2012

10,000 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கக் கூடிய கடிகாரத் தயாரிப்பில் மானுட முயற்சி!!!

உலகக் கோடீச்வரர் JEFF BEZOS  ஒரு நீண்ட காலத் திட்டத்தை மேற்கொண்ள்ளார். 10000 ஆண்டுள் இடைவிடாது ஓடக் கூடிய கடிகாரம் ஒன்றினை உருவாக்குவத்தே அவரது திட்டம்.

அற்புத்மான இந்தக் கெடிகாரத்தின் பெரும் பகுதி   மலைக்கு உள்ளே ஆழ்ந்த குகை ஒன்றில் இருக்கின்றது. அதற்குள் செல்வ்ச்து  மிக மிகச் சிரமமானதொரு செயலே  ஆகும்..

எப்பொழுதாவது  வீசிடும்  தென்றலின் மெல்லோசையும், பூச்சிகளின் தொடர் ரைச்சசல் சபதங்களும்  கேட்டவண்ணமே இருந்து வரும்.. இத்ததைய காட்டுப் புதர்களின்  வழியே மெதுவே மெல்ல ஏறிச் சென்ற பின்னே இருட்டுக்குள் மேலே  ஒரு க்கதவு திறக்கும். உள்ளே செல்பவர் தலைக்கு மேலே தனி ஊசல் ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதை உணரலாம். . இடப்புறமும் வலப்புறமும் அது ஆடிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பத்து செகண்டுக்கும் ஒரு முறை அவ்வாறு ஆடும்.

இதை யார் செய்தார்கச்ள் என்று யாருக்கும் தெரியாது. அது   செவ்வனே
இன்றைக்கும் அதி மிகத் துல்லியமாகச் மணி காட்டிக் கொண்டிருக்கின்றது. இவர்களுடைய செயலைப் பார்த்தால் அவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய கவலை மட்டுமே இருக்கின்றது, அதுவே இரு நிரந்தர நெருட்லாகத் தெரிகின்றது.





இது போன்ற விந்தையான எண்ணங்கள் எல்லாம் சில பணக்காரர்ககள்  உள்ளத்தில்தான் ஏற்படும். இஇங்கும்  அப்படித்தான்.  அமேசான்.காம்  நிறுவனத்தின் உரிமையாளர் JEFF BEZOS  எஎன்பவருக்குத்தான் தோஈன்றியது/ உண்மையிலெயே 10000 ஆண்டுகள் ஓடக்கூடிட ஒரு கடிகாரத்தை நிர்மாணிப்பதில் அக்கறைப்காட்டி வ்ருகின்றார்

அவரைப் பொறுத்தவரையில் இந்தக் கடிகாரம் ஒரு அந்தஸ்தையும் பெருமையையும் நிலை நாட்ட  மட்டுமல்ல.. நெடு நாளைக்குச் சிந்திக்கக் கூடிய தொலை நோக்குச் சிந்தனையின் வல்லமையை எடுத்துக் காட்டக் கூடிய ஒரு பொருள் இது. இதச் செய்து முடித்தவுடன்  மனித சமுதாயமே காலத்தைப்பற்றிக் கொண்டுள்ள பார்வையே மாறும்.

எதிர் காலத்தில்  மனித  சமுதாயமே  காலத்தைப் பற்றி வேறு விதமாகச் சிந்திக்க ஆரம்பிக்கும்.

இந்தக் கடிகாரம் நீடித்து நிற்கப் போகும் அளவிற்கு அமெரிக்க நாடு நிற்கப் போவதில்லை லைன்கிறார், பிளொஸ்.

பெரும் நாகரீகங்கள்; எழும். விழும் யாருமே இந்த உலகத்ம் எப்படிஇருக்கும் என்று சிந்திக்க முடியாமல் போய்  விடும்.

இந்தக் கடிகாரத்தைக் காண்பதற்குக் காத்திருப்போர் பட்டியல் தயாரித்தால், அதில் இடம் பெறுவது   இயலாததொரு  செயலகாக இருக்கும், . ஏனெனில், இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கே பல்லாண்டுகள் ஆகக் கூடும்.. இந்தத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் எகிப்திய நாட்டின் பிரமிடுகளையும் ஒப்பு நோக்கிக்  கொண்டிருகிகின்றனர்.

10000 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று பார்த்தால், நமது மூதாதையர்கள், வேட்டையாடி  வாழும்  கலாச்சாரமே அவர்களுக்குக் கை கொடுத்தது. ஆனால் இன்றோ ? தலை கீழான மாற்றம்!

1995 ஆம் ஆண்டு  டேன்னி ஹில்ஸ் திட்டமிட்டபடி ஒரு கடிகாரத்தை உருவாக்கும் யோசனை  மானுடர்கள் மத்தியில் சிந்தனையில் உலவித்தான் வந்தது. அதிலிருந்து எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் சோதனை வடிவங்களைத்  தயாரித்து   வந்திருக்கின்றனர்.எத்தகைய வெற்றியும் பெறவில்லை.


தற்பொழுது அமேசான்.காம்  நிறுவனத்தின் உரிமையாளர் JEFF BEZOSஇந்தக் கடிகாரத் தயாரிப்பதற்கான திட்டத்திற்காக 45 மில்லியன் டாலர்   மூலதனமாக  ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒருகிள்ளுக் கீரைச் . சமாசாரம் அல்ல.

டெக்ஸாச்ல் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதையை   குகை  போல் அமைத்து வருகின்றார்கள். அந்தக் குகைப் பகுதியிதான்  டிக் டிக் ஓசை  இதயத்தின் துடிப்பப்போல் தொடர்ந்து  இயங்கப் போகின்றது. போகின்றது  500 அடி செங்குத்தான குழி.  தோண்டுவார்கள்.  அது வேறு  திசையில் இருந்து வரும் சுரங்கப் பாதையை எதிர் கொள்ளும் அதனடியில்  12 அடி 7 அங்குலத்திற்கு ஒரு பெரு ருந்துண்டையும் இறக்குவவார்கள்.  அதைக் கொண்டு போகும் பொழுதே நீண்ட இரும்புத் தண்டு ஒன்றையும் இறக்குவார்கள்.

 இதன் பின் நகரும் மேடை ஒன்றையும்  அமைப்பர்.அதில் 2.5 டன் எடையுள்ள ரோபோவின் நீண்ட கைகளின் முடிவில் ஒரு அரத்தை  பொறுத்துவர்.

அது ஒரு வளந்த வட்ட முடைய மாடிப்ப்படியை  நேர் செங்குத்தான இரும்புத் தடியில் உருவாக்கும். மேலிருந்து கீக்ழாக இயங்கும்/ இவ்வொரு தடவைடும் ஓர் படி இறம்கும்.

மிலல் கடினமான உலோகக் கியர்கள் இருக்கும். . துல்லியமான வேகத்தில் ஓடும் நல்ல எடையுடைய டைடனிய சக்கரமும் இருக்கும்.

என்றைகோ ஒரு நாள் அமெரிக்கா என்றொரு நாடு இருந்ததை சந்ததியர் உணர்வ்ர்.

4000-ம் ஆண்டுகளுக்குப்ப்ன்னர், அந்தக் கஃடிகாரத்தைப் பார்ப்பவர்கல் இத ஏந்தான் உருவாக்கினார்களோ என்று வினவுவ்ர், வியப்புடன்.

ஆய்வுக் குழு  மேற்கத்திய டெக்ஸாசில் குழி தோண்ட ஆரம்பித்துவிட்டது. நம்பிக்கைதானே வாழ்க்கை.

செவ்வாய்க் கிரகத்திற்காகச் செய்த முயற்சிகள் இந்தியத் தமிழன் ஸ்ரீதரால் மின்சாரம்  தயாரிப்பதற்கு புதிய பாதையைக் காட்டியய்து போன்று, 10000 ஆண்டுகள் தொடர்ந்து ஓடக் கூடிய கடிகாரத்தைத் தயாரிப்பதற்கான முயற்சியிலும் மானுட குலத்திற்குக் கிடைக்கப் போகும் நன்மை கூடங்குளத்தை விடச் சிறப்பானதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் அல்லவாம் நண்பர்களே?


ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு ,மொழி பெயர்த்துத் தந்தவர் லயன் சீனிவாசன்
 38 -க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு
மொழியாக்கம் செய்திருக்கின்றார்.இவரது பெயர் லயன் ஸ்ரீனிவாசன்
கணினியைவிட வேகமாக மொழி பெயர்த்திடும் ஆற்றலுடையவர்.
  எஸ்.இராமகிருஷ்ணனின் உபபாண்டவம் ஆங்கில வடிவம் பெற்றுக் கொண்டிருக்கின்றது இவரது கைவண்ணத்தில் உபபாண்டவம்,  மற்றும் பாவண்ணன் கன்னடத்திலிருந்து தமிழுக்குத் தந்த பருவம் மிகவும் கனமான
நூல்கள். படிப்பதே கடினம். மொழிவளம் குன்றாமல் மொழியாக்கம்
 செய்வதென்பது  அரிதான செயல்.  எப்படி முடிகிறது , இவர்களால்? பிறவி மேதைகள் என்பதாலா?  அடுத்து இவர் வெளியிடப்போகும்
 “ நீதிபதியின் கண்ணீர் “

 


 மொழியாக்கம் லயன்ஸ் சீனிவாசன்

தமிழுக்குப் புதுசு!. தமிழகத்தில் விவாகரத்து
வழக்குகளை நீதிமன்றங்களில்  தாக்கல் செய்திடும் தம்பதிகளுக்கு
 இலவசமாகவே   புத்தகத்தை வழங்கப் போகின்றார்,

இவர்இவரது வயது 70க்கும் மேல்.  தொடர்பிற்கு             9840096405    


0 comments:

Post a Comment

Kindly post a comment.