வரலாறு
“தேமதுரை தமிழோசை உலகம் முழுவதும் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்று மகாகவி பாரதி பாடினார். இந்திய சமுதாயத்தின் உரிமைக் குரலாக மக்கள் ஓசை ஒலிக்க வேண்டும் என்று இளைய தமிழ்வேள் ஆதிகுமணன் முழக்கம் செய்தார்.
தினசரி நாளேடாக அனுமதி கிடைக்கப்பட்ட மக்கள் ஓசை 1992ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி வார இதழாக பவனி வரத் தொடங்கியது. சுமார் 13 ஆண்டு காலம் வார இதழாக வெளிவந்த மக்கள் ஓசை, 2005ஆம் ஆண்டு முதல் தினசரி இதழாக வெளிவரத் தொடங்கியது.
மக்கள் ஓசை வார இதழாக வெளிவந்தபோது, அதற்கு ஆசிரியராக க. குருசாமி பணியாற்றினார். அதன்பின் அக்னி சுகுமார், ஆதி இராஜகுமாரன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.
2005ஆம் ஆண்டு மக்கள் ஓசை தினசரியாக வெளிவந்தபோது பெ. இராஜேந்திரன் ஆசிரியராக பணியாற்றினார். அதன்பிறகு, 2007ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் மக்கள் ஓசையின் தலைமை ஆசிரியராக எம். இராஜன் பணியாற்றி வருகிறார்.
சேவை
- மக்கள் ஓசை பத்திரிக்கை வெறும் செய்திகளை வெளியிடும் பத்திரிக்கையாக மட்டுமல்லாது சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
* குஜராத் பேரிடர் – சுனாமி பேரிடர் ஆகியவற்றுக்காக மக்கள் ஓசை தன் பங்களிப்பை வழங்கியுள்ளது
* மலேசிய இந்திய சமுதாயத்தின் முக்கிய பிரச்சினையாக கருதப்படும் தமிழ்ப்பள்ளி – தோட்டத் தொழிலாளர் – சமூகச் சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் கல்வி சம்பந்தமான பிரச்சினைகளையும் எழுதி வருகிறது.
0 comments:
Post a Comment
Kindly post a comment.