Saturday, January 21, 2012

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் புதிய மாற்றம்

File:Evmcontrolunit.jpg

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதற்கேற்ப, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் புதிய மாற்றம் ஏற்படுத்த தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன்காரணமாக வாக்குப் பதிவு இந்திரத்துடன் பிரின்டர் இணைக்கப்படும்.

வாக்கு செலுத்தப்பட்டவுடன் வரிசை எண் மற்றும் சில தகவல்களுடன் கூடிய அச்சிடப்பட்ட சீட்டு உருவாகும். இதன்மூலம் வாக்குப் பதிவு நடை முறைகளில் மோசடியைத் தவிர்க்க முடியும். இன்னும் 6 மாதங்க்களில் இவை தயாரிக்கப்பட்டு விட்டாலும், நடக்க இருக்கும் 5 மாநிலத் தேர்தல்களில் இவை பயன்படுத்தப்பட மாட்டாது.

புதிய இயந்திரங்க்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் அவற்றின் கணக்கிடும் திறன் அதிகமாக இருக்கும்.இவற்ரில் மோசடி செய்யவோ இவற்றத் தகர்க்கவோ முடியாது.

இது போன்ற இயந்திரங்க்கள் செய்வதற்கு பல கோடி ரூபாய் ஆர்டர் கிடைத்துள்ளது.பல நாடுகள் நமது நாட்டின் இயந்திரத்தைப் பயன்படுத்திட விருப்பம் கொண்டுள்ளன.ஆனால் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக வாக்குச் சீட்டைப் பயன் படுத்துகின்றனர்.

இவ்வாறு அனில் குமார் கூறினார்

மற்றும் சில தகவல்கள் என்றால் என்ன என்பது புரியவில்லை. யார் யாருக்கு வாக்களித்தார் என்ற விபரம் நிச்சயமாக இருக்காது என்று நம்புகின்றோம்.

1 comments:

  1. அருமையான பயனுள்ள தகவல் வாழ்த்துகள்.

    ReplyDelete

Kindly post a comment.