Saturday, January 21, 2012

ஆசிரியர் கணக்கில் Rs.49,000,00,00,000

மேற்கண்ட தொகையில் பூஜ்ஜியங்களை எண்ணித்தான் எவ்வளவு ரூபாய் என்பதை நாம் தீர்மானிக்க முடியும். ஒரு ஆசிரியரின் வங்கிக் கணக்கில் இந்தத் தொகை இருக்கின்றது. நினைத்துப் பார்க்க முடியாத இந்தத் தொகையைத் தனது கணக்கில் வைத்திருப்பவர் ஓர் ஆசிரியர். மேற்கு வங்க்கத்தைச் சேர்ந்தவர். அவரது பெயர் பாரிஜாத் சாஹா.

அரசுக் கிளை ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். நெட் பேங்கிங்க் வசதியும் உள்ளவர்.இவரது மாதச் சம்பளம் 35000 ரூபாய். சேமிப்புக் கணக்கில் அதிக பட்சம் 10 ஆயிரம் ரூபாய் வைத்திருப்பது வழக்கம்.

சமீபத்தில் வங்கிக் கணக்கில் இருப்பு எவ்வளவு என்பதைப் பார்த்திட நெட் பாங்கிங்க் வசதியைப் பயன்படுத்தினார். தன் கணக்கைப் பார்த்தவருக்கு கண்கள் இருண்டன. ஏகப்பட்ட பூஜ்ஜியங்கள் போட்டுக் கோடிகளில் இருப்புக் காட்டியது வங்கிக் கணக்கு. 49 ஆயிரம் கோடி என்றதும் தனக்குள் சிரித்துக் கொண்டார்.

நண்பர் மூலம் வங்கியைத் தொடர்பு கொண்டார். விவ்காரம் பிபிசி வரை சென்று விட்டது. காரணம் கூற வங்கி மறுத்துவிட்டது. காரணத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றது வங்கி.

இப்படியும் சில விந்தைகள்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.