Monday, January 23, 2012

வடிவேலு காமெடி நிஜமானது! அதே பாணியில் அதிகாரி புகார்!




புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த தானாம் பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரமோகன்.இவருக்கு வயது 58. புதுவை தட்டாஞ்ச்சேரியில் உள்ள பாசிக் அலுவலகத்தில் டெப்போ மேலாளர்.

இவருக்குக் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த வேகாகொல்லை கிராமத்தில் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 3 சென்ட் பண்ணை வீடு இருந்தது. கடந்த 30 தேதி வீசிய தானே புயலில் இவரது கூரை வீடு சின்னா பின்னாமானது. தோப்பில் 40 க்கும் மேற்பட்ட பலா மரங்கள் அடியோடு சாய்ந்தன.ஆனால், இவர் வீடு இடிந்ததை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இது குறித்து சநிதிரமோகன் கூறுகையில்," எனது பண்ணை வீட்டைக் காணவில்லை என காடாம்புலியூர் காவல் நிலையம்,எஸ்.ப். கலெக்டர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளேன். போலீஸ் ந்டவடிக்க எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தையும் அணுக உள்ளேன் "என்றார்.

புகாரைப் பெற்ற காடாம்புலியூர் போலீசார் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பியுள்ளனர்.

நடிகர் வடிவேலு ஒரு காமெட்ய் காட்சியில் 'என் கிணற்ரக் காணவில்லை>, என்று புகார் செய்து போலீசை நில குலையச் செய்வார்' அதே போன்று உள்ளதாக இன்றையத் தினகரன் குறிப்பிட்டுள்ளது.

இரண்டும் எப்படி ஒன்றாகும்?


0 comments:

Post a Comment

Kindly post a comment.