Saturday, December 3, 2011

மீண்டும் படையெடுக்கும் படகுகள் – இரண்டே நாட்களில் குவிந்த 300 அகதிகளால் அவுஸ்ரேலியா அதிர்ச்சி

http://nerudal.com

சுமார் 100 வரையான அகதிகளுடன் மேலும் இரண்டு அகதிகள் படகுகள் மேற்கு அவுஸ்ரேலியக் கடற்பரப்பில் அந்த நாட்டின் எல்லைக் காவல் படகுகளினால் இடைமறிக்கப்பட்டுள்ளன.

அஸ்மோர் தீவுக்கு வடகிழக்காக நேற்று பிற்பகல் முதலாவது படகு இடைமறிக்கப்பட்டது. இதில் 19 அகதிகளும் 3 மாலுமிகளும் இருந்தனர்.

இதன்பின்னர், நேற்றுமாலை மற்றொரு அகதிகள் படகு கிறிஸ்மஸ்தீவுக்கு மேற்கே மீட்கப்பட்டது.

இந்தப் படகில் இருந்து உதவி கோரப்பட்டதை அடுத்தே எல்லைக் காவல் படகுகள் அங்கு சென்று அதனை மீட்டனர்.

இந்தப் படகில் 75 அகதிகளும், 3 மாலுமிகளும் இருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இவற்றில் இருந்த அகதிகள் பாதுகாப்பு, மருத்துவ சோதனைகளின் பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

வியாழக்கிழமை இரண்டு படகுகளில் சுமார் 200 அகதிகள் அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற நிலையில் நேற்றும் 100 வரையான அகதிகள் அங்கு சென்றுள்ளது அவுஸ்ரேலிய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தமாதம் மட்டும் அவுஸ்ரேலியாவில் 800 வரையிலான அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர்.

ஆனால் இந்த வாரத்தில் இரண்டு நாட்களிலேயே 300 இற்கும் அதிகமான அகதிகள் அவுஸ்ரேலியா சென்றுள்ளனர்.

ஆபத்தான மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையிலும் நான்கு படகுகள், சென்றுள்ளதும், திடீரென படகுகளில் நூற்றுக்கணக்கானோர் வரத் தொடங்கியுள்ளதும் அவுஸ்ரேலிய அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.