Thursday, October 27, 2011

சீன ஊடுருவல்: அந்தமான் தீவுகளில் பாதுகாப்பை அதிகரிக்கிறது இந்தியா

சீன ஊடுருவல்: அந்தமான் தீவுகளில் பாதுகாப்பை அதிகரிக்கிறது இந்தியா இந்தியப்பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் சீனாவின் ஊடுருவலைத் தாமதமாக உணர்ந்த இந்தியா, அந்தமான் தீவுகளில் தனது பாதுகாப்பை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

இந்தியப்பெருங்கடலில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது அந்தமான் நிகோபர் தீவுகள். இந்தியாவிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் அந்தமான் தீவுகள், தென்கிழக்காசியாவுக்கான நுழைவு வாயிலாகவும் இருக்கிறது. இந்தியப் பெருங்கடலைத் தாண்டி இந்தியாவுக்கு வந்த எவ்வித ஆபத்தும், அந்தமானை கடந்து தான் இந்தியாவைத் தொடமுடியும் என்பதால், இப்பகுதி மீது சீனாவுக்கு ஆர்வம் அதிகம். கடந்த சில நாட்களுக்கு முன் சீனக்கடற்படை கப்பல் ஒன்று இங்கு உளவு பார்த்த சம்பவம் மத்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், தனது தவறைத் தாமதமாக உணர்த்தியும் உள்ளது.


இதையடுத்துத் தனது பாதுகாப்பைப் பலப்படுத்தும் முயற்சியில் தற்போது இந்தியா இறங்கியுள்ளது. அங்கு 6 ஆயிரம் பாதுகாப்புப் படை வீரர்கள் களமிறக்கப்படவுள்ளனர். இது தற்போது அங்கிருக்கும் வீரரர்களை விட 3 மடங்கு அதிகம். மேலும் 12 போர் விமானங்களும் அங்கு பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்திய ராணுவ பிரிகேடியர் பல்விந்தர் சிங் கூறுகையில், அந்தமான் தீவுக்கூட்டத்தில் 572 தீவுகள் உள்ளன. இவற்றில் பாதுகாப்பு ப் பணிகளுக்காக ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரித்தார். இவர்கள் அப்பகுதி மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பாதுகாப்புப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள உதவுவர் என்றும் தெரிவித்தார்.

இனி வரும் காலங்களில் சீனாவின் ஆதிக்கம் இப்பகுதியில் பரவாமல் இருக்க மேலும் பல யுக்திகளை இந்தியா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.