Friday, October 14, 2011

டி.என்.பி.எஸ்.சி.,பணி தேர்விலும் அடிக்கிறாங்க - சென்னை உள்பட பல இடங்களில் லஞ்ச ரெய்டு

தமிழகத்தில் நம்பிக்கை ஸ்தாபனமாகவும், எதையும் நம்பாமல் தன் அறிவை மட்டுமே மூலதனமாக கொண்டு தன் வாழ்வை உயர்த்திக்கொள்ளும் எண்ணம் கொண்ட ஒரு தேர்வாக நம்பிக்கையில் இருந்து வந்தது தமிழக அரசுப் பணி தேர்வாணையம் . இந்த அமைப்பின் கீழ் பணியாளர் நியமனத்தில் லஞ்சம் வாங்கப்பட்டதாக வந்த புகாரை அடுத்து இந்த ஆணையத் தலைவர் செல்லமுத்து மற்றும் உறுப்பினர்கள் 12 பேர் வீடுகளில் காலையில் நுழைந்த லஞ்ச ஒழிப்பு படை போலீசார் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தத் தேர்வு மூலம் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பி ஏமாந்தவர்கள் பல பேர் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு பதவிக்கு 30 முதல் 40 லட்சம் வரை லஞ்சமாகப் பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த ரெய்டு தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆணையம் 1923 முதல் 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இக்கமிஷன் மூலம் குரூப்- 1 . குரூப்- 2 , குரூப் - 3 , குரூப்- 4 என அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இந்த தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.

டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கீழ் வரும் ஊழியர்கள் நியமனத்திற்குள் வருவர். இதன்படி குரூப்- 1ன் கீழ் ஆர்.டி.ஓ., டெப்டி கலெக்டர், டெப்டி ரிஜிஸ்தார் (கோ.ஆப்), பத்திரப்பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், டிவிஷன் மானேஜர், ஆகியோர் அடங்குவர். குரூப்- 2 ன் கீழ் கண்காணிப்பாளர்ள், மானேஜர் பதவிகள் என அடங்கும். குரூப் -3 எழுத்தர் பொறுப்பு, குரூப்- 4, வி.ஏ.ஓ.,க்கள் அலுவலக உதவியாளர்கள்.

இந்த ஆணையத்தின் தலைவர் செல்லமுத்து மற்றும் உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ்., செயலர்கள் என 13 பேர் வீடுகளில் ரெய்டு நடந்து வருகிறது. எம்.ராமசாமி, டி.சங்கரலிங்கம், கே.லட்சுமணன், எம்.÷ஷாபியான், எஸ்.சேவியர்ராஜா, கே.எம்,ரவி, ஜி.சண்முகமுருகன், கே.கே.,ராஜா, எஸ்.பன்னீர்செல்வம், ரத்னாசபாபதி, பி.பெருமாள்சாமி, டி.குப்புச்சாமி, செல்வமணி, உதயச்சந்திரன், அனில்மகேஸ்ரம் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடந்து வருகிறது.

கடந்த பிப்ரவரி 20ம் தேதி, வி.ஏ.ஓ., பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வு நடந்தது. இத்தேர்வில் வெற்றி பெற்ற எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான தேர்வு பட்டியல், கடந்த மாதம் 13ம் தேதி வெளியானது. இந்நிலையில், தேர்வு பெற்றவர்களிடம், பணியிடங்களை நிரப்பப் பண வசூல் நடப்பதாக செய்திகள் வருகின்றன.

எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் தான், விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். எனவே, இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். டி.என்.பி.எஸ்.சி., பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்று அதிகார வட்டம் தெரிவிக்கின்றது.



1 comments:

  1. " டி.என்.பி.எஸ்.சி., பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்று அதிகார வட்டம் தெரிவிக்கின்றது."

    தகவலுக்கு நன்றி.......

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete

Kindly post a comment.