உலக சாதனைக்காக தொடர்ந்து 123 மணி நேரம் பாடும் நிகழச்சியை செஞ்சியை சேர்ந்த திருவண்ணாமலை சாலை அரசு பணிமலை புதிய குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் பா.ரகுமான்(23) பாடிவருகிறார். இவருடைய தந்தை பெயர் பாஷாபேக்.இவர் பிஎஸ்சி., விஷவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். இந்த சாதனையை வியாழக்கிழமை மாலை 7 மணிக்குத் தொடங்கினார். பள்ளி மாணவர்கள் பயிலும் காலங்களில் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும். இது போன்ற தனித்திறன் சாதனைகளுக்கு மாணவர்களை ஊக்குவிக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் தூண்டுகோலாக விளங்க வேண்டும் என்பதைச் சொல்லி, தொடர்ந்து 123 மணி நேரம் பாடல்களைப் பாடி உலக சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பா.ரகுமான் கூறினார்.123 மணி நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொத்தம் 2416 பாடல்களை பாட உள்ளார். நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏராளமான பொது மக்கள் இந்நிகழ்ச்சியை கண்டு ரசித்து வருகின்றனர்
Saturday, October 29, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.