1946ல் இவர் எழுதிய முதல் நாவலான முல்லைக் கொடியாள் தமிழக அரசின் முத பரிசைப் பெறுகின்றது. பொன்னி மாத இதழில் நக்கீரன் என்னும் புனை பெயரில் கண் திறக்குமா?, பாலும் பாவையும் எழுதுகின்றார். ஏவிஎம் நிறுவனம் பாலும் பாவையும் நாவலைத் திரைப்படமாக்கி இவருக்குப் பெருமை சேர்க்கின்றது. வாழப் பிறந்தவள் திரைப்படத்திற்கு இவரே வசனம் எழுதுகின்றார். அன்பு படத்திற்கு வசனமும் ஒரு பாடலும் எழுதுகின்றார்.
எம்ஜிஆர்-சிவாஜி-பி.எஸ்.சரோஜா நடித்து, கே.வி.சகாதேவன் இசைஅமைத்து, ஆர்.ஆர்.பிக்சரஸ் டி.ஆர்.ராமண்ணா தயாரிப்பில், டி.ஆர். ராமண்ணா இயக்கிய் கூண்டுக்கிளி படத்திற்கு வசனம் எழுதியதும் இவர்தான். ரசிகர்களின் போட்டி பொறாமைகளால் படம் வெற்றி வாய்ப்பை இழந்தது.
கெட்டி மேளம் கொட்டிவிட்டு, பார் மகளே பார், மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ; இனிக்கும் இன்ப இரவே வா வா; இன்னலைத் தீர்க்க வா, இதய வானின் உதய நிலவே, எங்கே போகிறாய்?-நீ, எங்கே போகிறாய்?- இபப்டி இன்னும் சில பாடல்களைச் சொல்லலாம்
”பாலும் பாவையும் நாவலில், இவர் எழுதிய, ஓடினாள்..ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்” என்னும் வசனத்தைக் கலைஞர் கருணாநிதி எழுதிய பராசக்தி படத்தில் பயன் படுத்திக் கொண்டார்.
புத்தகப் பூங்கா என்ற பெயரில் ஓர் பதிப்பகத்தையும், மனிதன் என்ற மாத இதழையும் நடத்தியிருக்கின்றார். சில நண்பர்களைக் கூட்டுச் சேர்த்துக்கொண்டு மல்லிகா புரடக்ஷன்ஸ் என்ற சினிமா கம்பெனியையும் ஆரம்பித்து சில பாடல்களையும் பதிவு செய்ததாகத் தெரிகின்றது.
இவ்வளவு பெருமைகளுக்கும் சொந்தக்காரர் விந்தன் என்று அழக்கப்பட்ட கோவிந்தன். பிறந்தது காஞ்சிபுரம், நாவலூர், வேதாசலம்-ஜானகி ஆகியரின் புதல்வர்.22செப்டம்பர்1916. மறைந்தது30ஜூன்1975. இன்று அவரது96ஆம் ஆண்டு பிறந்த நாள்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.