Tuesday, August 30, 2011

தமிழகத்தை அதிரவைக்கும் போராட்டங்கள் இன்றும் ஒருவர் சென்னையில் தீக்குளிப்பு.


இந்திய மத்திய அரசின் சதியால் மூன்று தமிழர்கள் தூக்கிலிடப்படவுள்ள நிலையயில், அதை எதிர்த்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத போராட்டங்களில் தமிழ் உணர்வாளர்களும்,அரசியல் தலைமைகளும் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மன்ற உறுப்பினர் செங்கொடி அவர்கள் முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகியோரது தூக்குத்தண்டனையை இரத்து செய்யக்கோரி தீக்குளித்து மரணமடைந்து தமிழகத்தை மேலும் பேரெழுச்சி கொள்ளவைத்துள்ள நிலையில் இன்று சற்று முன் சென்னையில் 40 வயதுடைய செல்வம் என்பவர் மூவரினதும் தூக்குத்தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து தீக்குளித்துள்ளதாகவும் அவர் தற்போது உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாகவும் 40,45% தீ இவரின் உடலில் படர்ந்திருந்தமையால் இவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக உறுதிப்படுத்த முடியாத செய்திகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இன்று திருச்சியிலும் மூன்று பேர் தீக்குளிக்க முயன்றிருந்த போதும் பின் அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (௨௯-0௮-௨0௧௧ திங்கள் கிழமை)

http://www.uyarvu.com/

0 comments:

Post a Comment

Kindly post a comment.