Monday, January 11, 2010

11.01.2010 திங்கட்கிழமை - இலங்கையில் 255 தமிழர்கள் கொல்லப்படப்போகிறார்களா?
























இன்றைய ஃபேஸ்புக்கில் இடம்பெற்றுள்ள கதறல் செய்தி இதுதான்!

முள்வேலி முகாம்களிலிருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முயன்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட்ட 255 தமிழர்கள் இந்தோனேசிய கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை திரும்ப இலங்கைக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாமை மற்றும் பிற காரணங்களால் அவர்கள் அணைவரும் வரும் 11.10.2010, திங்கட்கிழமையன்று கொல்லப்பட்ப்போகிறார்கள் என்றும். அதற்குமுன் அவர்களை காப்பாற்ற மின்னஞ்சல்களிலோ மற்றும் ஏதும் மூகாந்திரங்களிலோ இந்தோனேசியவிலுள்ள ஐக்கியநாடுகள் சபை கிளையை

http://www.un.or.id/contacts

என்கிற இணைய முகவரி மூலம் தொடர்புகொண்டு நம் தாய் தமிழர்கள் 255பேரைகாப்பற்ற உதவுங்கள் என்று செய்தியை படிப்பவர்கள் அணைவரையும் கோருகிறார்கள்!

படிக்கையில் அதிரச்செய்யும் அந்த செய்தியில் இது தொடர்பாக இடம்பெற்றுள்ள மற்ற சுட்டிகள்

http://www.theage.com.au/national/tamil-refugees-questioned-by-sri-lankan-officials-20100109-lz4q.html

http://www.theaustralian.com.au/news/world/sri-lanka-grills-tamils-in-jakarta/story-e6frg6so-1225817519367

இந்த செய்தியை நான் படிக்கையில் இப்போது சனிக்கிழமை 9.01.2010 இரவு 12 மணியாகிறது. மீதமுள்ளது நம்மிடம் அதிகபட்சம் 24மணி நேரம்தான்!

மேலே உள்ள இரண்டு சுட்டிகள் மற்றும் கூகுள் தேடல்களில் அவர்களின் இப்போதைய நிலை குறித்து எந்த விவரமும் என்னால் பெற முடியவில்லை

எனவே நான் un-indonesia@un.or.id என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு கீழ்காணும் வேண்டுகோளை அனுப்பியுள்ளேன்.

Dear Sirs,

I understand that there are 255 defenseless, war stricken, terrified Tamil refugees pleading for asylum to the Government of Australia. They were caught by the Indonesian government at Jakarta and the Srilanka officials are now in Jakarata involved in interrogation of those poor Tamils. Also I learnt from the news agencies that the Sri Lankan Government plans to take them back to Sri Lanka on Monday in order to execute them.

Kindly stop the deportation of refugees fleeing from a government trying to kill them. This is like handing the Jewish people over to the Nazis, PLEASE HELP STOP THIS!
They survived a brutal genocide and lost everything before their eyes. These are innocent families, and right now, the genocidal Sri Lankan Government, the same one that destroyed everything in front of their eyes, disregarding the fact that they were civilians, that they were humans sent its Navy into Indonesian waters in order to bring them back to Sri Lanka on Monday,,January 11th . There are little children and babies on this boat, and every single one of these refugees will be killed if something isn't done to save them! They don't have UNHCR or any other ID cards, they will die, every single one of them. Please help save them!
--
K.Thangamani Prabu
Chennai, India

மிகுந்த மன அழுத்தத்துடன் நான் அனுப்பிய இந்த மின்னஞ்சல் செய்தியில் ஏதும் எழுத்து அல்லது இலக்கண் பிழைகள் இருக்குமாயின் நிக்கிவிட்டு தயவு செய்து நீங்களும் மேலுள்ள முகவரிக்கோ அல்லது http://www.un.or.id/contacts என்கிற தளத்திலிருந்து உங்களுக்கு சரியெனப்பட்ட முகவரிக்கோ வேண்டுகோள் மின்னஞ்சலை அனுப்புங்கள். உங்கள் ஈமெய்ல் பல தமிழ் உயிர்களை காப்பாற்றும்!

வளர்ந்து பெரிய பிள்ளையானால் நீ போராளியாகலாம்! என்று கூறி தமிழ் குழந்தைகள் பலபேரை குறி வைத்து இலங்கை ராணுவம் கொன்று குவித்ததை நாம் அறிவோம்! அந்த கொலைகாரர்கள் வெற்றிக்களிப்பில் இருக்கிறார்கள். இந்திய வாழ் தமிழர்களாலும், ஏன்… அமெரிக்காவாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை என்கிற மமதை நிறைந்த அந்த கொலைகாரகூட்டம் எந்தவிதமான கொலைக்கும் அஞ்சமாட்டார்கள்!!

255 பேர், ஏதுமறியா அப்பாவிகள், சின்னஞ்சிறு குழந்தைகள், தாய்மார்கள், இலங்கையில் தமிழர்களாக பிறந்ததன்றி எந்த தவறும் செய்யாதவர்கள்! ஒரே வெடிகுண்டால் அல்லது ஒவ்வொருவருக்கும் ஒரு துப்பாக்கி குண்டென்கிற விதத்தில் அந்த ஈரமற்ற சிங்களக்காடையர்கள் நம் த்மிழர்களை கொண்று போடுவதை தடுக்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் இப்போதைக்கு மின்னஞ்சல்தான். தயவு செய்து அவர்களுக்கு உதவுவோம்.



(செய்தி ஏஜன்சிகளில் தொடர்புள்ள பதிவர்கள் ஜக்கார்தாவில் சிங்கள அதிகாரிகளின் விசாரணை முடிந்து இலங்கை கொண்டு செல்ல ஆயுத்தப்படுத்தப்படும் அந்த 255 தமிழர்களின் இப்போதைய நிலை என்ன என்று தெரிந்துகொண்டு பதிவிட்டால், நாம் இன்னமும் ஏதும் செய்ய முயலலாம்)

Posted by க. தங்கமணி பிரபு at 12:26 AM

1 comments:

  1. மின்னஞ்சலில் வந்த செய்தி. மறு பதிவுதான். மனித உயிர்களின் மதிப்பு இவ்வளவுதானா? உலகத் தமிழ்க் காவலர்களுக்கு குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைத்திடவே ந்ரமில்லாத போது இதற்கெல்லாம் எப்படி...?
    திருவாரூர் மாவட்டத்திற் காட்டும் கரிசனம் எல்லாமாவட்டங்களிலும் காட்டப் படுகின்றதா?
    மாவட்ட mp.mla. -க்கள் தான் பதில் சொல்ல வேண்டும்?

    ReplyDelete

Kindly post a comment.