Friday, April 21, 2017

ஜெயலலிதா மறைவும் தமிழக அரசியலில் திருப்பங்களும்

ஜெயலலிதா மறைவை அடுத்து, தமிழகத்தின் ஆளும் அதிமுகவில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்கிறது. இந்த சூழலில், ஜெயலலிதா இறந்ததிலிருந்து தற்போது வரை அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் ஏற்பட்ட முக்கிய திருப்பங்களைக் காட்டும் பட்டியல் இது.
ஜெ.மறைவும், அதிமுகவில் தொடரும் குழப்பமும் - ஒரு காலவரிசை
Image captionஜெ.மறைவும், அதிமுகவில் தொடரும் குழப்பமும் - ஒரு காலவரிசை
டிசம்பர் 5, 2016: இரவு 11.30 மணிக்கு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
டிசம்பர் 6, 2016: இரவு 1.30 மணியளவில் முதலமைச்சராகப் பதவியேற்றார் ஓ. பன்னீர்செல்வம்.
டிசம்பர் 10, 2016: அ.தி.மு.கவை ஒரு ராணுவ அமைப்பு போல் தொடர்ந்து கொண்டுசெல்ல சசிகலா இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக வேண்டும் என்றார் ஓ. பன்னீர்செல்வம்.
டிசம்பர் 29, 2016: அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார்.
பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாபடத்தின் காப்புரிமைAIADMK
Image captionபொதுச் செயலாளராக பொறுப்பேற்ற சசிகலா
ஜனவரி 2, 2017: கட்சி ஒருவரிடமும் ஆட்சி ஒருவரிடமும் இருந்தால், சரியாக இயங்க முடியாது என்பதால் சசிகலா முதலமைச்சராகப் பதவியேற்க வேண்டுமென அ.தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினரான தம்பிதுரை தனது துணை சபாநாயகர் பதவிக்கான லெட்டர் பேடில் அறிக்கை விடுத்தார்.
பிப்ரவரி 5, 2017: அ.தி.மு.கவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்வுசெய்யப்பட்டார்.
பிப்ரவரி 6, 2017: சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
பிப்ரவரி 7, 2017: ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்த ஓ. பன்னீர்செல்வம் தன்னை நிர்பந்தப்படுத்தி ராஜினாமா கடிதத்தைப் பெற்றதாகக் கூறினார்.
தியானம் செய்த ஓ. பன்னீர்செல்வம்
Image captionதியானம் செய்த ஓ. பன்னீர்செல்வம்
பிப்ரவரி 11, 2017: தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆளுனரைச் சந்திக்க நேரம் கேட்கிறார் சசிகலா. அவர் தரப்பு எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைக்கப்படுகின்றனர்.
பிப்ரவரி 14, 2017: சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளியென உச்சநீதிமன்றம் உறுதிசெய்கிறது.
பிப்ரவரி 14, 2017: அ.தி.மு.கவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி கே. பழனிச்சாமி தேர்வுசெய்யப்படுகிறார்.
பிப்ரவரி 15, 2017: ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டிருந்த டிடிவி தினகரனும் டாக்டர் வெங்கடேஷும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுகின்றனர். டிடிவி தினகரன் உடனடியாக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
பிப்ரவரி 15, 2017: ஜெயலலிதாவின் சமாதியில் சபதம் செய்த பிறகு பெங்களூரில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைகிறார் சசிகலா.
மார்ச் 15, 2017: ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக தினகரன் அறிவிப்பு.
டிடிவி தினகரன்படத்தின் காப்புரிமைAIADMK
Image captionடிடிவி தினகரன்
மார்ச் 28, 2017: சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.கவின் இரு பிரிவுகளும் இரட்டை இலை சின்னத்தையோ, கட்சிப் பெயரையோ பயன்படுத்த முடியாது என அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்.
ஏப்ரல் 7, 2017: அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பலரது இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது.
ஏப்ரல் 10, 2017: ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை ரத்துசெய்கிறது தேர்தல் ஆணையம்.
ஏப்ரல் 14, 2017: டிடிவி தினகரன் இல்லத்தில் அமைச்சர்கள் டிடிவி தினகரனுடன் வாக்குவாதம்.
ஏப்ரல் 17, 2017: அமைச்சர் தங்கமணி இல்லத்தில் அனைத்து அமைச்சர்களும்கூடி ஆலோசனை. இரு அணிகளையும் இணைப்பது குறித்துப் பேசியதாக தெரிவிக்கின்றனர்.
ஏப்ரல் 18, 2017: டிடிவி தினகரனையும் அவரது குடும்பத்தினரையும் ஒதுக்கிவைத்துவிட்டு கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தப்போவதாக அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏப்ரல் 19, 2017: அ.தி.மு.கவிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவிக்கிறார் டிடிவி தினகரன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் : நன்றி பிபிசி
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

0 comments:

Post a Comment

Kindly post a comment.