Thursday, November 10, 2016

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்குவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் !




சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் சிரமத்தை கருத்தில்கொண்டு, வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை வாங்கிக் கொள்வதாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக, மத்திய அரசு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக, அறிவித்தது. இந்த நோட்டுகள் இனிமேல் செல்லாது என்றும், அடுத்த 50 நாட்களுக்குள் இவற்றை நாட்டு மக்கள், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், இதற்கான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதையடுத்து, நாடு முழுவதும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை வைத்துள்ள பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையே, சென்னை மெட்ரோ ரயில் பயணிகளிடம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை வாங்குவதில்லை எனப் புகார் எழுந்தது. ஆனால், இதனை மறுத்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம், மத்திய அரசின் வழிகாட்டுதல்படி செயல்பட்டு வருவதாகவும், வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை இந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி, பொதுமக்கள் மெட்ரோ ரயில்களில் பயணிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

Kindly post a comment.