Sunday, October 23, 2016

நோய்களை முறிக்கும் முருங்கைக்கீரை!





நம்மோட மூதாதையர்கள், எப்படி அதிக நாள் வாழ்ந்தாங்க? எப்படி ஆரோக்கியமாக இருந்தாங்கன்னு யோசிச்சிருக்கீங்களா? தொழில்நுட்ப வசதியெல்லாம் அந்தக் காலத்துல கிடையவே கிடையாது. நம்ம பாட்டி மற்றும் அம்மாக்களெல்லாம், தங்களோட உடல் உழைப்பை நம்பிதான் வாழ்ந்திருக்காங்க. இப்பவும் சில பேரு அப்படித்தான் இருக்காங்க. அதனாலதான், அவங்களால ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை வாழ முடிஞ்சுது.


துரித உணவுங்கிற விஷயமே, அப்போ கிடையாது. கிடைக்கிற காய்கறிகள், கீரைகள் போன்ற உணவுப் பொருட்களை வீட்டுலயே சமைச்சாங்க. அதுமாதிரியான எளிமையான, சத்தான உணவுகளை சாப்பிடுவாங்க. அந்த நாட்கள்ல ’அபார்ட்மெண்ட்’ கலாசாரம் கிடையாது. அதனால வீடுகளைச் சுத்தி தோட்டம் அமைச்சுகிட்டு, இயற்கையோட சேர்ந்து வாழ்ந்தாங்க. இப்படியிருந்த எல்லோரோட வீடுகள்லயும், கண்டிப்பா முருங்கை மரத்துக்கு ஒரு தனி இடம் உண்டு. 


முருங்கை இல்லாத வீடுகளே, முன்காலத்துல கிடையாதுன்னு சொல்லலாம். இப்போ, அப்படியே நிலைமை தலைகீழாயிடுச்சு. முருங்கை மரங்களை, இப்போ எங்கேயும் பார்க்க முடியறதில்லை. முருங்கைக்கீரை சாப்பிடணும்னு நினைச்சா, 60 ரூபாய்க்கும் மேல செலவழிக்க வேண்டியிருக்கு. நாகரிக வாழ்க்கையின் விளைவு, இலவசமாக கிடைக்கும் ஆரோக்கியத்தை  அதிக விலை கொடுத்து வாங்குகிறோம் நாம். இதுக்கு என்னதான் தீர்வு? ரொம்ப சிம்பிள். மறுபடியும், பழைய வாழ்க்கைக்கு போறது மட்டும்தான் சரியான வழி. 


நீங்க இருக்குற அடுக்கு மாடி குடியிருப்போட மொட்டை மாடியில முருங்கை விதையைப் போடுங்க. முருங்கை மரம் வறட்சியை தங்கும்னு சொல்லுவாங்க. அதனால, அந்த மரம் வளருவதற்கு நிறைய தண்ணீர் தேவையில்லை. மரம் வளர்ந்தா, பூச்சித் தொல்லை வருமேன்னு கவலை வேண்டாம். அடிக்கடி முருங்கை இலையை பறிச்சு, சமைச்சாலே போதும். பூச்சிகள் மரத்தை அண்டாது.


அதெல்லாம் சரி, முருங்கை கீரையில அப்படி என்ன இருக்குன்னு நினைக்கிறீங்களா? இதோ உங்களுக்கான பதில்.

முருங்கைக்கீரை, கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களைத் தீர்க்கும் வல்லமையுடையது. வைட்டமின், சுண்ணாம்பு, பொட்டாசியம், இரும்புச்சத்து நிறைந்தது.

கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் , எலும்பை உறுதிப்படுத்தும். அதோடு, இறுதி மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய எலும்புப்புரை நோயைத் தீர்க்கும்.

இது பசியைத் தூண்டும், அதோடு மலச்சிக்கலைத் தடுக்கும்.

சுவையின்மை மற்றும் உடலில் சேரும் கெட்ட கொழுப்பைத் தடுக்கும்.

இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் முருங்கைக் கீரையை உட்கொண்டால், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய இரத்த சோகை குணமாகும்.
இதெல்லாம் தெரிஞ்சபிறகும், நீங்க உடல் சோர்ந்து இருக்கலாமா? நேரா மொட்டை மாடிக்கு போங்க. முருங்கை இலையை பறிச்சு, சமைச்சு சாப்பிடுங்க.  இயற்கை கொடுத்த இந்த உடம்புக்கான ஆரோக்கியம், இயற்கைகிட்டதாங்க இருக்கு. 

- பவித்ரா 

0 comments:

Post a Comment

Kindly post a comment.