Monday, August 29, 2016

இரண்டரை வயது குழந்தையை மது குடிக்க வைத்த தொழிலாளர்கள்


சென்னை: சென்னை அம்பத்தூர் அருகே, இரண்டரை வயது குழந்தையை மது குடிக்க வைத்த இரண்டு தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

அம்பத்தூர் அருகே  மேனாம்பேடு என்ற இடத்தில் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. இங்கு என். செல்வம் மற்றும் ஜே.பழனி ஆகியோர் வேலை பார்த்தனர். நேற்று முன்தினம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தையை அழைத்து இவர்கள் மது குடிக்க வைத்துள்ளதாக தெரிகிறது. குழந்தையை காணாத தாய் தனலட்சுமி என்பவர் தேடி பார்த்த போது தொழிலாளர்கள் அருகில் குழந்தை இருப்பது தெரியவந்தது. உடனே சென்று, குழந்தையை தூக்கிய போது, குழந்தையின் வாயிலிருந்து மது வாடை அடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமி போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து செல்வம் மற்றும் பழனியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இருவரும் குழந்தைக்கு மது கொடுத்ததை ஒப்புக்கொண்டனர். விளையாட்டுக்காக இதை செய்ததாக கூறினர். தொடர்ந்து, இருவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருவண்ணாமலையில் நான்கு வயது குழந்தை மது குடிக்க வைத்த வீடியோ வெளியானது. இதனையடுத்து மதுவை குடிக்க வைத்த நபரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

https://news.google.co.in  -  தினமலரிலிருந்து.

0 comments:

Post a Comment

Kindly post a comment.