Sunday, August 28, 2016

ரெயில் பயணிகளுக்கு 92 பைசாவில் பயணக் காப்பீடு !


இந்திய ரெயில்வேயின் அதிகாரபூர்வமான  இணையதளத்தில் ஆன்லைன் மூலம்  முன்பதிவு செய்யும் பயணிகளுக்காக  92 பைசாவில் கொண்டுவரப்பட்டுள்ள  பயணக் காப்பீட்டுத் திட்டம்  ஆகஸ்டு 31-தேதி  முதல் அமுலுக்கு வருகின்றது.

இதன்படி  ரெயில்  விபத்துக்குள்ளாகி  பயணி இறந்தால் குடும்பத்திற்கு  10  லட்சம்  இழப்பீடு  வழங்கப்படும்.  உடல்  உறுப்பை இழந்தால் 7.5 லட்சம்  இழப்பீடு  வழங்கப்படும்.

இந்தப்  பயணக்  காப்பீடு  5 வயதுக்குக்  குறைவான  குழந்தைகளுக்குப்  பொருந்தாது என்று  ரெயில்வே  துறை  வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.

நன்றி :- டவுன் நியூஸ், அம்பத்தூர்   

0 comments:

Post a Comment

Kindly post a comment.