Saturday, November 14, 2015

நடிகனின் உண்மை முகம் எது ? - நடிகவேள் எம்.ஆர்.ராதா


*  தப்பு  செய்பவர்கள்

*  மோசடிக்காரர்கள்

* பணத்தால்  பட்டம்  பெற்றவர்கள்

* வரி  ஏய்ப்பு  செய்பவர்கள்

இப்படியெல்லாம்  குறிப்பிட்டுக்  கையை  நீட்டிச்  சுட்டிக்  காட்டுவது  யார்  தெரியுமா ?

சந்தேகமே  வேண்டாம்.  படத்தி  உள்ள  நடிகவேள்  எம்.ஆர்.ராதாதான்.

சினிமாவில்  இருந்தாலும்,  அதன்  யதார்த்த  முகத்தை  அப்போதே  தோலுரித்துக்  காட்டியவர்.

பகுத்தறிவுக்  கருத்துக்களை  மக்களிடம்  கொண்டு  சேர்த்தவர்.

“ நடிகர்களான  எங்களைப்  பார்த்தால்  அபிப்பிராயம்  மட்டும்  சொல்லுங்கள்.  நாங்கள்தான்  பெரிசு  என்று  சொல்லக்கூடாது.  இந்த  நாட்டில்  அறிவாளிகள்  பலர்  இருக்கின்றனர்.  “ நடிகர்களான  எங்களைப்  பார்த்தால்  அபிப்பிராயம்  மட்டும்  சொல்லுங்கள்.  நாங்கள்தான்  பெரிசு  என்று  சொல்லக்கூடாது.  இந்த  நாட்டில்  அறிவாளிகள்  பலர்  இருக்கின்றனர்.  அவர்களை  நினையுங்கள்.  அறிவான  அதிகாரிகள்  இருக்கிறார்கள்.  அவர்களைப்  புகழுங்கள்.  நாங்கள்  எங்கோ  கூத்தாடுகிறோம்.  அதைத்  திரையில்  காட்டுகிறார்கள்.  நாங்கள்  கலைஞர்கள்  என்று  பேசுகிறார்கள்.  அந்தப் பட்டம்  இப்போது  வந்தது.  பணம்  வந்ததும் சிலர்  கொடுத்த  பெயர்  அது. யார்  காசு  வாங்கிக்கொண்டு  கொடுத்ததும்  என்று  தெரியவில்லை.

கலைஞர்கள்  உயர்ந்தவர்கள்  அல்ல.  நாங்கள்  கோடீஸ்வரர்கள்.  இன்கம்டாக்ஸ்  பாக்கி  வைத்துள்ளவர்களும்  நாங்கள்தான்.  இதைப்போல்  பெரிய  தப்பெல்லாம்  செய்வோம்.  இன்கம்டாக்ஸ்  என்றால்  என்ன?  அது  மக்களின்  பணம்.  அது  மக்களுக்குத்  தெரியவில்லை.  அதக்  கட்டாமல்  ஏமாற்றும்  கூட்டம்  இந்தன்  கலஞர்களின்  கூட்டம்,  ந்நன்  உட்பட.  நானும்  13  லட்சம்  இன்கம்டாக்ஸ்  கட்ட  வேண்டும்.  அவர்கள்  என்னிடம்  எங்கே  வாங்கப்  போகிறார்கள்.? நானும்  எங்கே  கட்டப்  போகிறேன் ?  வருடாவருடம்  இன்கம்டாக்ஸ்  வரும்.  ஆகட்டும்  என்றுமட்டும்  சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  நாங்கள்  தப்பு  செய்பவர்கள். மககள்  பணத்தை  மோசம்  செய்பவர்கள்  கூட்டம்  சினிமாக்காரர்கள்  கூட்டம்.

MRRadhaactor.png

Madras Rajagopala Radhakrishnan Naidu

மலேசியாவில்  பேசியதன்  ஒரு பகுதி

0 comments:

Post a Comment

Kindly post a comment.