Flash news:

  • உலகம்
  • தமிழகச்செய்திகள்
  • கட்டுரைகள்
  • சிறப்பு செய்திகள்
  • அனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.

Saturday, November 14, 2015

பாரீஸ் பயங்கரவாத தாக்குதலில் 120-க்கும் மேற்பட்டோர் பலி

  • இடது: பெரும் துயரத்தில் பாரீஸ் மக்கள் - படம்: ராய்ட்டர்ஸ் | வலது: தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களுள் ஒன்று. | படம்: கெட்டி இமேஜஸ்
    இடது: பெரும் துயரத்தில் பாரீஸ் மக்கள் - படம்: ராய்ட்டர்ஸ் | வலது: தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களுள் ஒன்று. | படம்: கெட்டி இமேஜஸ்
  • பாரீஸில் நடந்த தாக்குதலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் | படம்: கெட்டி இமேஜஸ்
    பாரீஸில் நடந்த தாக்குதலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் | படம்: கெட்டி இமேஜஸ்
  • பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் | படம்: ராய்ட்டர்ஸ்.
    பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் | படம்: ராய்ட்டர்ஸ்.

'ஐ.எஸ். இயக்கம் தொடுத்த போர்' என்கிறார் பிரான்ஸ் அதிபர்

பாரீஸில் நடந்த தாக்குதலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் | படம்: கெட்டி இமேஜஸ்


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் | படம்: ராய்ட்டர்ஸ்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் பல இடங்களில் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக அதிக்கரித்துள்ளது; ஏறத்தாழ 200 பேர் காயமடைந்தனர்.

இது, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் 'திட்டமிட்ட்டு தொடுக்கப்பட்ட போர்' என்று பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, துப்பாக்கி ஏந்திய 8 பேரும், ஒரு தற்கொலைப் படைத் தீவிரவாதியும் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளியில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்டு, இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என்றும், இது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தொடுத்த போர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த பயங்கரத் தாக்குதலைத் தொடர்ந்து, தேசம் முழுவதும் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தையச் செய்திப் பதிவுகள்:

பயங்கரவாத தாக்குதலை அடுத்து பிரான்ஸில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்நாட்டு அதிபர் ஹாலந்தே பிறப்பித்தார். மேலும், பிரான்ஸ் எல்லைகளில் சீல் வைத்து பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கொடூர தாக்குதல்கள்:

வடக்கு பாரீஸில் உள்ள கால்பந்து மைதானத்தில் பிரான்ஸ் - ஜெர்மன் அணிகளுக்கு இடையேயான நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மைதானத்துக்கு வெளியே இரண்டு இடங்களில் குண்டு வெடித்ததாகத் தெரிகிறது. அசோசியேடட் பிரஸ் செய்தியாளர் ஒருவர் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததை தான் கேட்டதாகக் கூறியுள்ளார்.

கால்பந்து நிகழ்ச்சியைக் காண மைதானத்தில் அதிபர் ஹாலந்தேவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிணைக் கைதிகள் விடுவிப்பு:

இதேபோல் பாரீஸில் உள்ள பட்டாக்லான் இசையரங்கிலும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அங்கிருந்த பொதுமக்களில் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.
மொத்தம் 8 தீவிரவாதிகள் அந்த அரங்குக்குள் அதிரடியாக நுழைந்தனர். அவர்களில் 7 பேர் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டனர். ஏழு பேரும் பலியாகினர். எஞ்சிய ஒரு தீவிரவாதி பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கொல்லப்பட்டார். பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இத்தகவலை பிரான்ஸ் அரசு உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

18 பேர் படுகொலை:

லா பெல்லே எபோக் என்ற உணவு விடுதியில் நடத்தப்பட்டது. தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

யாரும் பொறுப்பேற்கவில்லை:

பாரீஸ் தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், தாக்குதல் நடந்த சில நிமிடங்களிலேயே ட்விட்டர் தளத்தில் ஜிகாதிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக பிரான்ஸ் படைகள் தாக்குதல் நடத்தி வருவதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.

ஒபாமா கண்டனம்:

பாரீஸ் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் சந்திப்பின்போது ஒபாமா, "பயங்கரவாதிகள் மீண்டும் ஒருமுறை அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் பிரான்ஸ் மீதானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதான தாக்குதல்.

பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து நீதியை நிலைநாட்ட அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது" என்றார்.

மேலும், பிரான்ஸ் அதிபர் ஹாலந்தேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒபாமா பேசினார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டனம்

பாரீஸில் நடந்துள்ள பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரான்ஸ் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். பிரான்ஸுக்கு இந்தியா துணை நிற்கும். தாக்குதலில் சிக்கியவர்கள் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாரீஸில் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின் அருகே போலீஸார் அணிவகுப்பு: படம்: ராய்ட்டர்ஸ்.

ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்:

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், "பாரீஸில் பல இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதற்கு என் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன், பட்லாகா தியேட்டரில் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி பொது மக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி கண்டனம்:

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கால்பந்து மைதானம் உட்பட பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாரீஸில் இருந்து வந்துள்ள பயங்கரவாத தாக்குதல் செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அச்சுறுத்துவதாகவும் உள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மோசமான தருணத்தில் இந்தியா பிரான்ஸுக்கு துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இந்திய தூதரகம் உதவி எண் அறிவிப்பு

பிரான்ஸில் உள்ள இந்தியர்கள் உதவிக்காக இந்திய துணைத் தூதரகம் சார்பில் 0140507070 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் பக்கம் துவக்கம்:

பாரீஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் தங்கள் உறவுகள், நட்புகள் பத்திரமாக இருக்கின்றனரா என்பது குறித்த தகவல்களைப் பறிமாறிக் கொள்ள ஏதுவாக ஃபேஸ்புக் நிறுவனம் பிரத்யேக பக்கத்தை உருவாக்கியுள்ளது. Paris Terror Attacks என்ற பக்கத்தை ஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அதில் "Mark them safe if you know they’re OK" என்ற ஒரு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை பாரீஸ் மக்கள் பயன்படுத்தி உறவுகளுக்கு தங்களது நலனையும், தங்கள் உறவுகள் நலனையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

பழிவாங்கப்பட்டதா பிரான்ஸ்?

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக பிரான்ஸ் ராணுவப் படைகளை அனுப்பியுள்ளது. இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பாரீஸில் பட்லாகா திரையரங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டுமே 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அந்த அரங்கில் இருந்த வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் ஜனாசக் கூறும்போது,"எனக்கு அந்த தீவிரவாதிகள் பேசியது தெளிவாகக் கேட்டது. அவர்கள் "இது உங்கள் அதிபர் ஹாலந்தேவின் தவறு. அவர் சிரிய பிரச்சினையில் தலையிட்டிருக்கக் கூடாது என்றனர்" எனத் தெரிவித்தார். மேலும், இராக் குறித்தும் தீவிரவாதிகள் பேசியதாக அவர் கூறினார்.

கடந்த ஜனவரியிலும் தாக்குதல்:

பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ என்ற வார பத்திரிகை அலுவலகத்தினுள் கடந்த ஜனவரி மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அலுவலகத்துக்குள் புகுந்த முகமூடி அணிந்த 3 நபர்கள் அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதியாக சென்று கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் பத்திரிகையின் ஆசிரியர், 4 கார்ட்டூனிஸ்டுகள் உட்பட 12 பேர் பலியாகினர்.


தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.