Tuesday, November 10, 2015

வேலையைச் சுலபமாக்கும் கூகுள்




நிறுவனங்கள் கணிணி மயமாக்கப்பட்ட பிறகு அனைத்து பரிவர்த்தனைகளும் மெயிலிலே நடக்கின்றன. தகவலை தெளிவாக சொல்வது, எப்போது யாருக்கு அனுப்பினோம் என்பதை தெரிந்து கொள்ள முடிவது, ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்ப முடியும் என்பது உள்ள பல சாதகங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு கட்டத்தில் வேலை செய்வதை விட மெயில்களுக்கு பதில் சொல்வதையே பல நிறுவனங்களின் உயரதிகாரிகளுக்கு வேலையாக இருக் கிறது.

சமயங்களில் ஓரிரு நாட்கள் விடுமுறை எடுத்து விட்டு வந்தால் அத்தனை மெயில்களையும் பார்த்து படித்து பதில் அனுப்புவதற்குள் விடிந்துவிடும். அவர்களை போன்றவர்களுக்காக கூகுள் ஸ்மார்ட் ரிப்ளை என்னும் செயலியை உருவாக்கி இருக்கிறது.

இரண்டே கிளிக்குகளில் பதில் அனுப்ப வேண்டும் என்பதுதான் கூகுளின் திட்டம். இந்த செயலி, உங்களுக்கு வரும் இமெயில்களை படித்து அதற்கு ஏற்ப, மூன்று விதமான பதில்களை உங்களுக்கு கொடுக்கும். அதில் எந்த பதிலை அனுப்ப நினைக்கிறீர்களோ அதை அனுப்பலாம். அல்லது அந்த வாய்ப்பில் சில திருத்தங்கள் செய்வதாக இருந்தால் அதை செய்து அனுப்பலாம்.

சிறிய பதில் அனுப்ப இந்தச் செயலியை பயன்படுத்திக் கொள்ள முடியும். மெஷின் லேர்னிங் மற்றும் ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸைப் பயன்படுத்தி வரும் மெயில் படிக்கப்படும். பொதுவாக அனுப் பப்படும் 20,000 பதில்களை ஆராய்ந்து மூன்று வாய்ப்புகளை ஸ்மார்ட் ரிப்ளை உங்களுக்கு கொடுக்கும்.

உதாரணத்துக்கு உங்கள் மேலதிகாரி உங்களிடம் ஒரு தகவல் கேட்கிறார் என்று வைத்துக்கொண்டால் இது போன்ற மூன்று விதமான பதில்கள் உங்களுக்கு வரும்.

1. அந்த தகவல் என்னிடம் இல்லை.

2.அதற்காக வேலை செய்து கொண்டிருக்கிறேன்.

3. உடனடியாக அனுப்புகிறேன்.

மேலே உள்ள மூன்று பதில்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து நேரடியாக அனுப்பலாம். அல்லது தேர்வு செய்த பதிலில் உங்களுக்கு ஏற்றவாறு திருத்தி அனுப்பலாம். இதன் மூலம் மெயிலை பயன்படுத்துபவர்களுக்கு நேரம் மீதமாகும் என்று கூகுள் தெரி வித்திருக்கிறது.

ஒரு வருடத்துக்கு முன்பு இன்பாக்ஸ் (ஜிமெயிலின் மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் இன்பாக்ஸ்) என்னும் செயலியை கூகுள் அறிமுகப்படுத்தியது. அந்த செயலியைப் பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட்கள் இந்த ஸ்மார்ட் ரிப்ளை செயலியை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் பிரிவில் கூகுள், ஆப்பிள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்துவருகின்றன.

இந்தச் செயலி ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் கிடைக்கும். இன்னும் சில நாட்களில் இந்த செயலியை கூகுள் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இந்தச் செயலிக்கான ஐடியா மென்பொருள் வல்லுநரான பிலின்ட் மிகில்ஸ் உடையது.

நன்றி :- தி இந்து





0 comments:

Post a Comment

Kindly post a comment.