http://www.machamuni.com/?p=4032
October 21, 2015 by: machamuni
தாமதமாக வெகு நாட்களுக்குப் பின் ஒரு கட்டுரை வெளியாகிறது .கடும் வேலைப் பழு மற்றும் நிறைய ஆராய்ச்சி முயற்சிகளின் காரணமாக தாமதம் நேரிட்டது . நமது மச்ச முனி மூலிகையகம் தற்போது பல நோய்களை வெல்லும் பயிற்சிகளையும் , நமது வாசகர்களை மேலும் ஒரு உயர் நிலைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஒரு மைல் கல்லாக மாறியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.எதிர் காலத்தில் மச்ச முனி மூலிகையகம் ஒரு சேவை மனப்பான்மை உள்ள ஒரு மாற்று முறை மருத்துவ முறை பல்நோக்கு மருத்துவ வளாகமாக உருவாகும் என்று உறுதி பட கூறுகிறோம்.
சித்தர்களின் பிராண சிகிச்சை முறை என்பது போகர் மற்றும் லாவோட்சு தாமோ , போதி தர்மர் என்றழைக்கப்படும் பல்லவ மன்னன் நம் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு சென்று சீனா , மற்றும் திபெத்திய லாமாக்களுக்கு கற்றுக் கொடுத்த அந்த ரகசிய முறைகள் நம் தமிழ்ச் சித்தர்களின் முறையே ஆகும்.அதில் பல பிரிவுகள் உண்டு.
அதில் ஒன்றுதான் ரெய்கி ( REI- KI ) என்னும் சிகிச்சை முறை . நம் பிராணசக்தியை கூட்டிக் கொண்டு நமக்கு நோய் வராமல் தடுத்துக் கொண்டு, நம் பிராண சக்தியினை , நாம் மற்றவர்கள் உடலில் செலுத்தி மற்றவர் நோய்களை குணப்படுத்துவதுதான் இந்த சிகிச்சை முறை.
இதில் முதலில் நமது ஏழு சக்கரங்களும் திறக்கப்படும். நமது முதுகுத் தண்டில் உள்ள சக்கரங்கள் அனைத்தும் வலஞ் சுழியாகச் சுற்றினால் பிரபஞ்ச சக்தி நம் உடலில் உள் வாங்கப்படும் . இடஞ் சுழியாகச் சுற்றினால் நம் உடலில் உள்ள பிரபஞ்ச சக்தி கொஞ்சம் , கொஞ்சமாக வெளியேறி உடல் இறப்பை நோக்கி விரையும்.இந்த சக்கரங்கள் அனைத்தும் பஞ்ச பூதங்களின் கூட்டால் உருவாக்கப்பட்டது.
பஞ்ச பூதங்களுக்கு என்று குறியீடுகள் உண்டு .இதில் ஒரு குறியீட்டை மட்டும் இப்போது பார்ப்போம்.
நாம் பிள்ளையார் சுழியைப் பார்த்திருப்போம்.அது போன்றதொரு அமைப்பில் உள்ளதுதான் ஷோ கு ரேய் என்னும் நிலத்துக்கு உள்ள குறியீடு.இது மகாகாளியின் குறியீடு. காளியை வஜ்ர யோகினி என்று புத்த மதத்தில் குறிப்பிடுகிறார்கள். திபெத்திய லாமாக்கள் இந்த குறியீட்டை , எதையும் வலுப்படுத்தும் செயல்களுக்கு உபயோகிக்கிறார்கள் .
நம் உடலில் இருந்து ஆன்மாவைப் பிரித்து வெகு தூரம் இயக்கும் போது ( ASTRAL TRAVEL )நம் உடலுடன் ஆன்மா தொடர்பு கொண்டே இயங்கும் அந்த இணைப்பை வெள்ளிக் கம்பி இணைப்பு என்பர் ( SILVAR CARD ) . இந்த இணைப்பையும் உடலையும் பாதுகாக்க இந்த குறியீட்டைப் பயன்படுத்துவார்கள். இந்த சித்தை பிரகாமியம் என்றும் கூடு விட்டுக் கூடு பாய்தல் என்று கூறுவர்.
SHO -KU -REI
இந்த குறியீட்டை நம் சக்கரங்களில் உள்ள நிறங்களுக்கான கற்களுடன் செய்து அணிந்து கொள்வதும் உண்டு.
இந்த குறியீட்டை கண்ணாடிப் பிம்பமாக உபயோகித்தால் பலக் குறைப்புக்கும் உபயோகிக்கலாம்.அதாவது சர்க்கரை நோயாளர்களுக்கு இதை ஆக்ஞா சக்கரத்தில் இந்த இரண்டு குறியீடுகளையும் வரைய சர்க்கரை அளவு கூடாமலும் குறையாமலும் இருக்கும்.அதையும் கீழே கொடுத்துள்ளோம்.
இந்த பிரபஞ்ச சக்தி பற்றிய ரகசியங்களைத் தெரிந்து கொண்டு நம் உடற்பிணிகளைக் களைந்து கொள்வதுடன் மற்றவர்களுக்கு ஏற்படும் பிணியையும் போக்க நம் மச்ச முனி மூலிகையகத்தில் பல மேன்மையான ஆன்மீகவியலாளர்களை வைத்து கற்றுத் தரப்படும். அதற்கு அணுக வேண்டிய முகவரி.
திரு அமீர் சுல்தான் அவர்கள் ,தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்
மச்சமுனி மூலிகையகம்
( MACHAMUNI HERBALS )
SMALL .SCALE.INDUSTRIES NO: 330021189121 ,
COTTAGE INDUSTRIES REG NO:- 1646
எண்.1/17,5வது தெரு, நாராயணசாமி தோட்டம், சின்னகொடுங்கையூர், சென்னை-118.
மின்னஞ்சல் :-
machamunimooligaiyagam@gmail.com
அலைபேசி எண் :- 9597239953
3 Responses to “நம் சித்தர்களின் மரபு வழி மருத்துவமான பிராண சிகிச்சை மற்றும் உடல் தொடா சிகிச்சை ( ரெய்கி )”
- ஐயா,// நமது மச்ச முனி மூலிகையகம் தற்போது பல நோய்களை வெல்லும் பயிற்சிகளையும் , நமது வாசகர்களை மேலும் ஒரு உயர் நிலைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஒரு மைல் கல்லாக மாறியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் //மிக்க மகிழ்ச்சி.// நம் பிராணசக்தியை கூட்டிக் கொண்டு நமக்கு நோய் வராமல் தடுத்துக் கொண்டு, நம் பிராண சக்தியினை , நாம் மற்றவர்கள் உடலில் செலுத்தி மற்றவர் நோய்களை குணப்படுத்துவதுதான் இந்த சிகிச்சை முறை //பிராண சக்தியை கொண்டு, மனதை அடக்க சித்தர்கள் ஏதேனும் கூறியுள்ளார்களா? என்றால், அதனை பற்றிய கட்டுரை எழுதினால் நன்று.உணவால் உடலில் ஏற்படும் நோய்களை விட, மனதால் (மனக்குழப்பத்தால், மனச்சிதைவால், மனக்கட்டுப்பாடிண்மையால், மன அழுத்தத்தால்…) ஏற்படும் நோய்களே அதிகமாகி கொண்டிருக்கின்றன என்பது எனது எண்ணம். உதாரணமாக என்னையே சொல்லலாம்.நன்றி,போத்தி
- வணக்கம் ஐயா. இதுபோன்று ஒரு சேவையை எங்களுக்கு கொடுத்தமைக்காக மிக்க நன்றி குருவே… நான் ஏற்கெனவே சில மூலிகை தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தி வருகிறேன். மிக நல்ல பலன்களை பெற்றிருக்கிறேன். அதற்கு சான்றாக கப நோய் நிவாரணியால் என் பிள்ளைகளின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்திருக்கிறது. அடிக்கடி சளியோ காய்ச்சலோ வருதில்லை., நமது மச்சமுனி மூலிகையகத்திற்கு மிக்க நன்றி குருவே..
ஐயா,
நான் பலமுறை பின்னுட்டம் இட முயன்றபோதும் தொழிநுட்ப கோளறால் இயலவில்லை .தங்களின் பதிவு அருமை.21 நாட்கள் அடிப்படை பயிற்சி செய்தாலபோதுமானதா இல்லை வேற பயிற்சி எதாவது செய்யவேண்டுமா ஐயா?
நன்றி..