Sunday, November 22, 2015

திருமதி பட்டுக்கோட்டையாருக்கு மிகவும் பிடித்த கணவரின் பாடல் !



தின்பார்  வெறியால்……

இரைபோடும்  மனிதருக்கே  இரையாகும்  வெள்ளாடே
இதுதான்  உலகம் வீண்  அனுதாபம்  கொண்டுநீ
ஒரு  நாளும்  நம்பிடாதே.                    ( இரை )        

முறையோடு  உழைத்துண்ண  முடியாத  சோம்பேறி
நரிபோலத்  திரிவார்  புவிமேலே – நல்ல
வழியோடு  போகின்ற  வாய்பேசா  உயிர்களை
வதச்சுவதச்சுத்  தின்பார்  வெறியாலே         ( இரை )

காலொடிந்த  ஆட்டுக்காகக்  கண்ணீர்விட்ட  புத்தரும்
கடல்போல  உள்ளங்கொண்ட  ஏசுநாதரும்
கழுத்தறுக்கும்  கொடுமைகண்டு  திருந்தவழி  சொன்னதும்  உண்டு
காதில்  மட்டும்  கேட்டுஅதை  ரசித்தாங்க  -ஆனா 
கறிக்கடையின்  கணக்கைப்  பெருக்கி  வந்தாங்க   ( இரை )

0 comments:

Post a Comment

Kindly post a comment.