தின்பார் வெறியால்……
இரைபோடும் மனிதருக்கே இரையாகும்
வெள்ளாடே
இதுதான் உலகம் வீண் அனுதாபம்
கொண்டுநீ
ஒரு நாளும் நம்பிடாதே. ( இரை )
முறையோடு உழைத்துண்ண முடியாத
சோம்பேறி
நரிபோலத் திரிவார் புவிமேலே – நல்ல
வழியோடு போகின்ற வாய்பேசா
உயிர்களை
வதச்சுவதச்சுத் தின்பார்
வெறியாலே ( இரை )
காலொடிந்த ஆட்டுக்காகக் கண்ணீர்விட்ட
புத்தரும்
கடல்போல உள்ளங்கொண்ட ஏசுநாதரும்
கழுத்தறுக்கும் கொடுமைகண்டு திருந்தவழி
சொன்னதும் உண்டு
காதில் மட்டும் கேட்டுஅதை
ரசித்தாங்க -ஆனா
கறிக்கடையின் கணக்கைப் பெருக்கி
வந்தாங்க ( இரை )
0 comments:
Post a Comment
Kindly post a comment.