Sunday, September 28, 2014

தமிழக முதல்வராகிறார் ஓ.பன்னீர்செல்வம்: நாளை பதவியேற்பு



சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அடுத்த முதல்வரை தேர்வு செய்வது குறித்து விவாதிக்க நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக  ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் நாளை ஆளுநர் மாளிகையில் நடக்க உள்ள விழாவில் முதல்வராக பதவியேற்க உள்ளார். அப்போது முக்கிய அமைச்சர்களும் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி :-தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.