Monday, September 29, 2014

தமிழகத்தின் 24-ஆவது முதல்வர்


தமிழகத்தின் 24-வது முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பிறந்த ஓ.பன்னீர்செல்வம், பி.யூ.சி., வரை படித்துள்ளார். 1996 வரை பெரியகுளம் நகராட்சி தலைவர் பொறுப்பை வகித்தார். அதன்பிறகு, 2001-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
அப்போது, முதல்வர் பதவியில் இருந்து ஜெயலலிதா விலக வேண்டிய சூழ்நிலையில், 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். 2002-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். பின்பு, பொதுப்பணித் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், எதிர்க்கட்சி துணைத் தலைவராகச் செயல்பட்டார். கட்சியின் பொருளாளராகவும் இருந்தார். 2011-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் தமிழக நிதியமைச்சராகவும், அவை முன்னவராகவும் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் பொதுப்பணித் துறை அமைச்சர் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தின் முதல்வராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

நன்றி :-தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.