Friday, November 29, 2013

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றமில்லை


திருமணம் செய்து கொள்ளாமல், சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
  [வெள்ளி - 29 நவம்பர்-2013 - 01:32:26 மாலை ]

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து பிரிந்துவிட்ட ஒரு பெண், அந்த ஆணிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி ராதாகிருஷ;ணன் தலைமையிலான பெஞ்ச் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறும் போது, திருமணம் செய்து கொள்வதோ, செய்து கொள்ளாமல் இருப்பதோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை. இருந்தாலும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல. இந்த உறவு, திருமண உறவு போன்றது அல்ல. இத்தகைய உறவை பல நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கி உள்ளன.

இந்த உறவில், ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. இந்த உறவு முறிவடைந்தால், பெண்களும், இந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளும்தான் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பெண்களையும், அவர்களது குழந்தைகளையும் பாதிப்பில் இருந்து பாதுகாக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என்றும் திருமண உறவை அங்கீகரித்தது போல இந்த உறவையும் அங்கீகரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.




 தமிழன் ;- காணொளிச் செய்திகள்

0 comments:

Post a Comment

Kindly post a comment.