Thursday, October 10, 2013

http://vidhai2virutcham.com/tag/பூப்படைதல்

விடயங்களோடு இடுகை..
பூப்படைதல்
வெறுமனே உள்ளாடையில் உள்ள ரத்தக் கறையை வைத்துக் கொண்டே நம் பெண்கள் பூப்படைந்து விட்டார் களா இல்லையா என்பதை தீர் மானிக்கும் சமூகமாகவே நாம் இன்னும் இருக்கிறோம். ஒவ்வொருவ ரும் தன் பிள் ளை பூப்படைந்து விட்டதா என்று 12 அல்லது 13 வயதில் தான் சிந்திக்கிறார்கள்.

ஆனால் உண்மை நிலைமை அதுவல்ல. முதன் முதலாய் மாதவிடாய் ஏற்படுவதல்ல பூப்படைதல். முதன் முதலா க மாதவிடாய் ஏற்படுவது மெனார்க்கே(menarche) எனப்படுகிறது, இது பூபடைதலின் ஒரு அங்க மே. இந்த menarche எனப்படுவது நாம் அறிந்த து போல 11-12 வயதளவில் தான் ஆரம்பிக்கி றது.ஆனாலும் பூப்படைதல் என்ற செயற்பாடு பெண்களிலே 8 வயதிலேயேதொடங்கி விடுகி றது. நாம் நம் குழந்தைக ள் இன்னும் பூப்டை யவில்லை என்று வைத்தி யரிடம் அழைத்துச் செல்வது பெரும்பாலும் 15 வயதுக்குப் பிறகு தான். பாருங்கள் 8 வயதில் நிகழ வேண்டிய ஒரு நிகழ்வு நிகழவில்லை என்று நாம் அறிந் து கொள்வது 15 வயதில். இன்னும் நாம் பின் னுக்கு நிற்கி றோம் என்பதில் எந்தச் சந்தேக மும் இல்லை. ஆக பூப்படைதல் என்பது ஒருநாளில் நடந்து முடியும் நிகழ்வல்ல. இது பெண்களிலே 8 வயதில் தொடங்கி 14 வயதில் முடிவ டையும் ஒரு நீண்டகால தொடர் நிகழ்வா கும்.
பூப்படைதல் நிகழ்வில் என்ன நடைபெறுகி றது?
பூபடைதலின்போது ஒரு பெண் குழந்தைப் பருவத்திலிருந்து இள முதிர் பருவத்திற்குச் செல்கிறாள். அப்போது அவள் உடல் மற்று ம் உளம் என் பவை பக்குவப்பட்ட முதிர்ச்சி அடைந்த நிலைக்கு மாற்றப் படுகிறது.
இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழ்வது ஹார் மோன்களால். பூப்படைதல் என்ற செயற் பாடு முதலில் ஆரம்பிப்பது மார்பக வளர்ச்சி யோடு.இது ஏற்கனவே சொன்னது போல கிட்டத்தட்ட எட்டுவயதில் ஆரம்பிக்கும். அதைத்தொடர்ந்து அப் பெண்ணில் உடல் வளர்ச்சி சடுதியாக ஏற்படத் தொடங்கும் தொடங்கும். அதைப்போல உடற்பருமனும் சற்று முதியவருக்கு உரிய வகையில் மாறும். குறிப்பாகஇடுப்புப் பகுதி மற்றும் தொடைகளின் பருமன் அதிகரிக்கும்.
பின்பு கொஞ்சம் கொஞ்சமாக முதியவர்களில் காணப்படுவ து போன்ற மயிர் வளர்ச்சி ஏற் படும். குறிப்பாக பெண் உறுப்பு க்குமேல், மற்றும் அக்குள் பகு திகளிலே. ஆரம்பத்தில் இந்த மயிர்கள் செறிவு குறைந்ததா க மெல்லியதாக இருந்தாலும் போகப்போக முதிர் நிலையை அடையும். இவ்வாறு 8 வயதில் ஆரம் பிக்கும் பூப்படைதலின் முக்கிய நிகழ்வான முதல் மாதவிடாய் பூப் படைதல் ஆரம்பித்து கிடத் தட்ட 2 வருடங்க ளின்பின்பே நிகழும். இந்த ஒரு தனி நிகழ் வைத்தான் நாம் பூப்படைதல் என்று கொண்டாடு கிறோம்.
மாதவிடாய் ஏற்படுவதோடு பூப் படைதல் நின்று விடுவதி ல்லை. நான் மேலே சொன்ன நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று பூப்படைதல் நிறைவு பெறுவது 14 வயதில்.அனேகமாக ஆரப்பத்தில் மாதவிடாய் ஒழுங்கு அற்றதாகவே இருக்கும் .இது ஒழுங் க்காவதற்கு சில காலங்கள் செல்லா லாம். இது பற்றி பூரண அறிவு அப் பிள்ளைக்கு தெளிவுபடுத்தப் பட வே ண்டிய ஒன்று. இது பெற்றோரின் கடமையா கும்.இது தவிர முதன் முதலாக அந்தப் பிள்ளை செக்ஸ் பற்றி சிந்திக்கத் தொடங்கும். சுய இன் பம் போன்ற செயற்பாடுகளும் ஆர ம்பிக்க லாம்.
மேலே சொன்னது எல்லாம் வெறும் உடலியல் மாற்றங்களே . உளவியல் மாற்றங்களை வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.
இதுவரை பூப்படைதலின் போது ஏற்படுகின்ற நிகழ்வுகளைப் பற்றிச் சொல்லி இருந்தேன்.ஒவ்வொரு பெண்ணிலும் பூப்படைதலினால் ஏற்படுகின்ற சடுதியான மாற்றங்க ள் பற்றி நிறையச் சந்தேகங்கள் எழும்.
சில பெண்கள் இதை சாதாரணமான நிகழ்வாக ஏற்றுக் கொண்டு சந்தோ சப்பட்டாலும் சில பெண்களிலே இது பற்றிய போதிய அறிவின்மை யால் பல மன உளைச்சல்கள் ஏற் படலாம்.
இதைத் தவீர்க்கும் முகமாக ஒவ்வொரு பெண்ணுக்கும் பூப்படைதலின் போது நடைபெறும் மாற்றங்கள் பற்றி போதிய அறிவு வழங்கப்பட வே ண்டும். இந்த அறிவினை வழங்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெற் றோருக்கும் இருக்கிறது.
பூப்படைதலின் முதற் கட்டமாக ஒரு பெண்ணின் மார்பு வளர்ச்சி ஆரம் பிக்கும். அதுவே அவர்களுக்கு மிகப் பெரிய அசௌகரியமாக இருக்கலா ம் .தொடர்ந்து அவர்களின் அக்குள் மற்றும் பிறப்புறுப்புப் பகுதியில் மயி ர்கள் வளருதல். இந்த புதிய மாற்றங்கள் அவர்களின் பூப்படைத லின் ஆரம்ப நிலை என்றும் இதுவே ஒவ்வொரு பெண்ணிலும் நடை பெறும் சாதாரண நிகழ்வு என்றும் அடிப்படை அறி வை அந்த பெண்ணிற்கு புகட்ட வேண்டியது பெற்றோரின் கடமையாகும். குறிப்பாக தாய் இது பற்றி தன் பெண்ணோடு மனது விட்டு உரையாட வேண்டும்.
இந்நேரத்திலேயே அடுத்தகட்டமாக ஆரம்பி க்கப்போகும் மாதவிடாய் பற்றி அது ஆரம் பிக்கும் முன்னமே எடுத்துக்கூறி அதை அந்தக் பிள்ளை சாதாரணமான நிகழ்வாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக் க வேண்டியதும் ஒருதாயின் கடமையாகும்.

சிலவேளைகளில் தாய் மாதவிடாய் காரண மாக சில அசௌகரியங்களை சந்திப்பவராக இருக்கலாம். ஆனாலும் தன் பிள்ளையிடம் அது பற்றி கூறாமல் மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணிலும் ஏற் படும் ஒரு சாதாரண நிகழ்வு என்றும் அதுவே அவர்களின் பெண்மைக்கு அடையாளமாக அமைவதோடு பிற்காலத் தில் அவர்களிற்கு தாய்மைத் தன்மையை அழிக்கப் போவது என்று கூறி அவர்களை மாத விடாயை சந்தோசமாக ஏற்றுக் கொ ள்ளுபடி செய்ய வேண்டும். அத்தோடு மாத விடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப்போ க்கினை எவ்வாறு சமாளிப்பது என்பது பற் றியும் பூரணமான அறிவை அது ஏற்படுவ தற்கு முன்னமே ஒவ்வொரு பெண் பிள் ளைக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டிய தும் ஒரு தாயின் கடமையாகும்.
மேலும் மாதவிடாய் சம்பந்தமாக அந்தப் பெண் பிள்ளையின் மனதிலே நிறையச் சந்தேகங்கள் எழலாம். குறிப்பாக,

1. மாதவிடாய் காலத்தில்எத்தனை நாளைக்கு இரத்தப் போக்கு இருக்கு ம்?
2.மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி ஏற் படுமா?

3.மாதவிடாய் காலத்தில் தான் குளிக்கலா மா?

4.மாதவிடாய் காலத்தில் தான் விளையாட லாமா?

இந்த சந்தேகங்களை யாரிடம் கேட்பது என் று தெரியாமல் அவர்கள் திண்டாடிக் கொண் டிருக்கலாம்.தாய் இதுபற்றி தானாகவே பேச த் தொடங்கி இது பற்றிய விபரங்களை பெ ண்ணுக்கு முழுமையாக தெரியப்படுத்த வே ண்டும்.
குறிப்பாக மாதவிடாய் மாதத்திற்கு ஒரு முறை ஏற்பட்டாலும் சரியாக எத்தனை நாளுக்கு ஒருமுறை ஏற்படும் என்பது பெண்ணுக்கு பெண் வேறுபாடும். 21. நாட்க ளில் இருந்து 35 நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்ப டுவது சாதாரணமானது என்று தெரிய ப்படுத்த வேண்டும் .அதாவது சில பெண்க ளிலே 21 நாட்களுக்கு ஒரு முறை மாதவி டாய் ஏற்படும். சில பேர்ல 32 நாட்களுக் கு ஒரு முறை யோ அல்லதுசில பேரிலே 35 நாட்களுக்கு ஒரு முறையோ ஏற்படலாம். 21 தொடக் கம் 35 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தி ல் மாதவிடாய் ஏற்படுவது சாதாரணமா னது என்றும் இது சரியாக ஒவ் வொரு மாதத்திற்கும்(30நாட்கள்) ஒருமுறைதான் ஏற்பட வேண்டியதில்லை என்றும் தெளி வு படுத்த வேண்டும்.
அடுத்ததாக மாதவிடாய் காலத்தில் மித மான வயிற்று வலி ஏற்படலாம் என்றும் இது சில நாட்களுக்கே இருக்கும் என்று ஆரம்பத்திலேயே சொல்லி வைக்க வேண் டும்.மேலும் மாதவிடாய் காலத்தில் சாதாரணமான நடவடிக்கைகள் (சைக்கிள் ஓடுதல், நடனமாடுதல், விளையாடுதல்) போன்றவற்றிலும் ஈடுபடலாம் என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு தாயும் தன் பெண் பிள்ளையை மாதவிடாய் ஆரம்பத்தினாலும், பூப்படைதளினாலும் ஏற்படப் போகும் மாற்றங்களை எதிர்கொள்ளும் முகமாக தயார்ப்படுத் த வேண்டும்..

0 comments:

Post a Comment

Kindly post a comment.