பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்.
தொலைத் தொடர்பு நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் தொழில்நுட்பப் பொறியாளர்கள்
திங்கள்கிழமை (ஜூலை 29) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பி.எஸ்.என்.எல். மொபைல் மற்றும் பிராட் பேண்டு சேவைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்திந்திய பட்டதாரி பொறியாளர்கள் மற்றும் தொலை தொடர்பு அலுவலர்கள் சங்கத்தின் வட்டச் செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:-
எங்கள் சங்கத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்கு ஊதிய நிர்ணயக் குழு பரிந்துரைத்த சம்பளத்தை இன்று வரை நிர்வாகம் வழங்கவில்லை.
பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கவும் வழிவகை செய்யவில்லை.
இதைத் தவிர பெரும்பாலானவர்களுக்கு முறையான பதவி உயர்வு கிடைக்கவில்லை.
இதைக் கண்டித்து பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
தில்லியில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமையகம் மற்றும் தொலை தொடர்புத் துறை அமைச்சகத்திடம் இது குறித்து முறையிட உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
நன்றி :- தினமணி, 30-07-2013:-
இதனால் பி.எஸ்.என்.எல். மொபைல் மற்றும் பிராட் பேண்டு சேவைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்திந்திய பட்டதாரி பொறியாளர்கள் மற்றும் தொலை தொடர்பு அலுவலர்கள் சங்கத்தின் வட்டச் செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:-
எங்கள் சங்கத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்கு ஊதிய நிர்ணயக் குழு பரிந்துரைத்த சம்பளத்தை இன்று வரை நிர்வாகம் வழங்கவில்லை.
பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கவும் வழிவகை செய்யவில்லை.
இதைத் தவிர பெரும்பாலானவர்களுக்கு முறையான பதவி உயர்வு கிடைக்கவில்லை.
இதைக் கண்டித்து பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
தில்லியில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமையகம் மற்றும் தொலை தொடர்புத் துறை அமைச்சகத்திடம் இது குறித்து முறையிட உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
நன்றி :- தினமணி, 30-07-2013:-
0 comments:
Post a Comment
Kindly post a comment.