Sunday, July 21, 2013

சூரியசக்தி மின் விளக்குகள், சென்னை, பட்டினப்பாக்கத்தில் தொடக்கம்

சென்னையில் அறிவிக்கப்பட்டிருந்த சூரியசக்தி மின் விளக்குகள் அமைக்கும் பணி பட்டினப்பாக்கத்தில் தொடங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்
.
சென்னை மாநகராட்சியில் சூரியசக்தியால் இயங்கும் தெரு விளக்குகள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சோதனை முயற்சியாக பல்வேறு இடங்களில் சூரியசக்தி தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன. சோதனை முயற்சி வெற்றி பெற்றதால், இந்த திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னையில் சூரியசக்தி தெரு விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பட்டினப்பாக்கம் பகுதியில் முதல் கட்டமாக சூரியசக்தி தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெண்டர் வெளியிடப்பட்ட நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் பணியாணை வழங்கப்பட்டு விடும். அதன் பின்னர் மற்ற பகுதிகளிலும் படிப்படியாக பணிகள் தொடங்கும். மேலும் இந்த விளக்குகளை மரங்கள், உயர்ந்த கட்டடங்கள் அதிகம் இல்லாத பகுதிகளில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த விளக்குகள் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் அமைக்கப்படும். சூரிய ஒளி பட்டால் அணைந்து, சூரிய ஒளி மறையும் போது தானாக எரியும் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.                                                                                                                                  

நன்றி :-தினமணி, 20-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.