பால், சர்க்கரையின் விலை உயர்ந்துள்ள நிலையில், சிதம்பரத்தில், முதியவர்
ஒருவர் ரூ.5-க்கு சுவையான ஃபில்டர் காபி விற்பனை செய்கிறார்.
கடலூர் குமாரபேட்டையைச் சேர்ந்தவர் சி.கே.ஜெயராமன் (65). இவரது பூர்வீகம் சிதம்பரம். கடலூர் குமாரபேட்டையில் மகள் வீட்டில் மனைவி ஜே.பானுமதியுடன் வசிக்கிறார்.
இருப்பினும் தினமும் பஸ்ஸில் வந்து சிதம்பரம் ரயில்வே பீடர் ரோட்டில் காபிக் கடையை நடத்திவிட்டு இரவு கடலூர் செல்கிறார்.
இதுகுறித்து சி.கே.ஜெயராமன் தெரிவித்தது:
""தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரை காபி விற்பனை நடக்கிறது.
நாள் ஒன்றுக்கு 15 லிட்டர் பால் வாங்கி காபி தயாரிக்கிறேன். குறைந்தது சுமார் 500 காபிக்கு மேல் விற்பனை செய்வதால் ரூ.5 விலை கட்டுப்படியாகிறது. லாபமும் கிடைக்கிறது''என்கிறார்.
நன்றி :- தினமணி, 16-06-2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.