Saturday, May 18, 2013

மறக்கமுடியாத மாமனிதர் சு.சமுத்திரம் !


எழுத்தாளர் சு.சமுத்திரம்

இரா.காமராசு

சாகித்திய அகாடமி, விலை ரூ.50/-

இந்திய மொழிகளில் சிறந்த எழுத்தாளர்களாகத் திகழ்ந்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளை , அனைத்து மொழிகளிலும்  மத்திய அரசு நிறுவனமான சாகித்திய அகாடமி வெளியிட்டு வருகிறது.

அந்த வரிசையில் தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த சு.சமுத்திரத்தின் வாழ்க்கை வரலாறு இப்போது வெளிவந்துள்ளது. இதை, இரா.காமராசு சிறப்பாக எழுதியுள்ளார்.

சு.சமுத்திரம் எதையும் வெளிப்படையாகப் பேசுபவர். எழுதுபவர். அவருடைய நாவல்கள் , சிறுகதைகள் , அனைத்துமே சமூக அநீதிகளைச் சாடுபவை.

இந்த அற்புத எழுத்தாளர் 2003- ஆம் ஆண்டில் கார் விபத்தில்காலமானது. அனைவருடைய இதயங்களையும் குலுங்கச் செய்த  சோக நிகழ்ச்சி.

அவர் உயிரோடு இருந்திருந்தால் எத்தனை எத்தனை காவியங்களைப் படைத்திருப்பார்!

                                                                                                            நன்றி :- தினமணி 


0 comments:

Post a Comment

Kindly post a comment.