Thursday, April 4, 2013

ஜெயந்தன் நினைவு இலக்கிய பரிசுப் போட்டி !



ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிகளுக்கான நூல்கள் ஏப் 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று செந்தமிழ் அறக்கட்டளையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி மூன்றாவது ஆண்டாக நடைபெறுகிறது. இந்தப் பரிசுப் போட்டிக்கு நாவல்-நாடகம், சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் 2012 ஆம் ஆண்டு வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.

எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், நூல்களை அனுப்பலாம். ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத் தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். அனுப்பப்படும் நூல்கள் மூன்று பிரதிகளாக ஏப். 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

தமிழ்மணவாளன்,

18, பத்மாவதி நகர்,

மாதாவரம் பால் பண்ணை,

சென்னை- 600 051.

0 comments:

Post a Comment

Kindly post a comment.