Sunday, April 7, 2013

புதிய தலைமுறை சேனலின் தமிழன் விருதுகள் --2013--!



தொழில்துறையின் நம்பிக்கை நட்சத்திரம் விருது வான்மதிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

கன்டெய்னரை வசிப்பிடமாக மாற்றி தொழில்பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் வான்மதி. 

 வான்மதி குறித்த நமது வலைப்பூ  பதிவு 10/2012-இல்

http://rssairam.blogspot.in/2012/10/blog-post_6643.html 

”பாவையர் மலர்” வான்மதி கன்டெய்னர் நகரை நிர்மாணிக்கட்டும் !


தொழில்துறை சாதனையாளர் விருது முருகப்பா குழுமத்தின் வெள்ளையனுக்கு வழங்கப்பட்டது.

இலக்கியத்தில் நம்பிக்கை நட்சத்திரம் விருது தமிழ்ச்செல்விக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரது படைப்புகள் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

தமிழ் இலக்கியத்தில் சாதனையாளர் விருது கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு வழங்கப்பட்டது.

கால்பந்து போட்டிகளில் சாதனை படைத்த இராதிகாவுக்கு விளையாட்டுத்துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விருது வழங்கப்பட்டது.

விளையாட்டுத்துறை சாதனையாளர் விருதை ஹாக்கி விருது  
தன்ராஜ் பிள்ளை பெற்றார்.

சமூக சேவையில் நம்பிக்கை நட்சத்திரம் விருகை அருண். கிருஷ்ணமூர்த்தி பெற்றார். இவர் ஏரிகள் சீரமைப்புக்காக பணியாற்றி வருகிறார்

சமூக சேவையில் சாதனையாளர் விருதை கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பெற்றுக்கொண்டார். இவர் நிலமற்ற விவசாயிகளுக்காக போராடி வருகிறார்.

அறிவியல் தொழில்நுட்பத்துறை, நம்பிக்கை நட்சத்திரம் விருதை சிறிய வகை டிராக்டர்களை உருவாக்கிய அரெங்கசாமி பெற்றார். 

இதே போல், அறிவியல் தொழில்நுட்பத்துறை சாதனையாளர் விருது டாக்டர் சிவதாணுப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது.

கலைத்துறை சாதனையாளர் விருது நடிகர் கமலஹாசனுக்கு வழங்கப்பட்டது.

கலைத்துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விருது வீதி நாடகக் கலைஞர் சந்திரனுக்கு வழங்கப்பட்டது.                                                                               

நன்றி :- தினமலர், 07-04-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.