Saturday, April 6, 2013

சென்னையில், தமிழ்ப்புத்தாண்டு புத்தகத் திருவிழா14-ல் தொடக்கம் !


தமிழ் நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு புத்தகக் கண்காட்சி வருகிற 14 -ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு புத்தகத் திருவிழா நடைபெறும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதன்படி காமராஜர் சாலையில் உள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரியில் வருகிற 14-ஆம் தேதி புத்தகத் திருவிழா தொடங்குகிறது. ஏராளமான புத்தக வெளியீட்டாளர்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றனர். ஏப்ரல் 28-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும். தமிழ் வளர்ச்சி மற்றும் பள்ளிக் கல்வித் துறைகள் இக்கண்காட்சியை இணைந்து நடத்துகின்றன. சிறுவர்களுக்கு அனுமதி இலவசம். பார்வையாளர்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.                                                         

நன்றி ள்- தினமணி, 06-04-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.