Sunday, March 31, 2013

நெல்லையில் தி. க.சி. 89-வது பிறந்த தினவிழா!

சாகித்திய அகாதெமி விருது பெற்ற மூத்த திறனாய்வாளர் தி.க.சி.யின் 89-ஆவது பிறந்த நாள் விழா திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்றது.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற மூத்த திறனாய்வாளர் தி.க.சி.யின் 89-ஆவது பிறந்த நாள் விழா திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இலக்கிய ஆர்வலர்களும், தமிழ் எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் ஒருங்கிணைந்து இந்த விழாவை திருநெல்வேலி நகரம் சுடலைமாட தெருவிலுள்ள தி.க.சி.யின் இல்லத்தில் நடத்தினர்.

இளவேனில், பாரதி விஜயன், தோப்பில் முகம்மது மீரான், கிருஷி, நாறும்பூநாதன், திவான், வள்ளிநாயகம், பால்முகமது, சீனிகுலசேகரன், குட்டி என்ற சண்முகசுந்தரம், சிதம்பரநாதன், முருகேசன், குமாரசுப்பிரமணியன், சுந்தரலிங்கம், கட்டளை கைலாசம், லெனாகுமார், புருஷோத்தமன், முத்துக்குமரன், கே. பாலசுப்பிரமணியம், சரவணன், மீனாட்சிசுந்தரம், தென்காசி கவிஞர் எஸ். ராஜாமுகம்மது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மானூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கல்லூர் வேலாயுதம், திருநெல்வேலி மண்டல தலைவர் மோகன் ஆகியோர் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழர் நலஉரிமை இயக்கம்: திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியிலுள்ள வ.உ.சி. அரங்கில் தமிழர் நல உரிமை இயக்கம் சார்பில் தி.க.சி.யின் 89-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

இரா. நல்லகண்ணு, பழ. நெடுமாறன், ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.                    

நன்றி :- தினமணி, 31-03-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.