Friday, March 8, 2013

மே 1-ல் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு மாநில அளவிலான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி திருச்சியில் மே 1-ம் தேதி நடைபெற உள்ளது.

புள்ளம்பாடி திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் இப்போட்டியில் வெற்றி பெறும் 110 பள்ளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் மொத்தப் பரிசுத் தொகையும், கல்லூரி மாணவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

1330 குறள்களையும் ஒப்பிக்கும் 50 பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.1,330 பரிசுத் தொகை வழங்கப்படும். முதல் 500 குறள்கள் ஒப்பிக்கும் 50 மாணவர்களுக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை வழங்கப்படும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு முதல் 500 குறள்களை ஒப்பித்துப் பரிசு பெற்ற மாணவர்களும் இந்த ஆண்டுப் போட்டியில் கலந்து கொள்ளலாம். மீதமுள்ள குறள்களை ஒப்பிக்கும் 50 மாணவர்களுக்கு தலா ரூ.850 பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

பள்ளிகளில் சேர்க்கப்படாத, திருக்குறள் ஒப்பிக்கும் திறன் கொண்ட குழந்தைகளும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

போட்டியில் பங்கேற்க விரும்புகிறவர்கள் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் தங்கள் சுய விவரங்களை கடிதம் வாயிலாக விண்ணப்பித்து முன்பதிவு செய்ய வேண்டும்
.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை, 

எண் 25, திருக்குறள் தெரு, 

புள்ளம்பாடி, 

திருச்சி மாவட்டம்- 621 711. 

மேலும் விவரங்களுக்கு 

 97865 86992, 97517 79791 

 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி :- தினமணி, 08-03-2013




0 comments:

Post a Comment

Kindly post a comment.