Tuesday, January 1, 2013

என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி- வா.மணிகண்டன்

www.nisaptham.com/



அன்பு நண்பர்களுக்கு,
வணக்கம்.
எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான “என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி” (காலச்சுவடு பதிப்பகம்) வெளியீடு பெங்களூரில் நிகழவிருக்கிறது.
பெங்களூரில் ஒவ்வொரு மாதமும் நண்பர்கள் சந்திப்பை நடத்த வேண்டும் என பல மாதங்களாக விரும்பியதுண்டு. ஆனால் நடத்தவே இல்லை. இந்த விருப்பம் 2013 இல் நிறைவேறட்டும். அதன் தொடக்கமாக இந்த புத்தக வெளியீடு இருக்கட்டும்.
ஜனவரி 6 அன்று மாலை 4-6 மணியளவில் கப்பன் பார்க் வளாகத்தில் இருக்கும் ப்ரஸ் க்ளப் எதிரில் நாம் சந்திக்கலாம். எந்தவிதமான Formalities இல்லாத ஒரு நிகழ்வாக இது அமையும்.
2013 தொடங்கும் புத்தாண்டு தினத்தில் வாழ்த்துகளோடு சேர்த்து இந்த அழைப்பையும் உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். 
முழுமையான தகவல்களுடனான அழைப்பிதழுடன் இன்னொரு முறையும் அழைப்பேன்...
அவசியம் வாருங்கள்!
அன்புடன்,
மணிகண்டன்

தொடர்புக்கு: +91 9663303156

0 comments:

Post a Comment

Kindly post a comment.