Saturday, December 29, 2012

சீனா: ஆற்றின் அடியில் 27 கி.மீட்டர் சுரங்கம் அமைத்து அதிவேக ரெயில் சேவை !



சீனாவில் 6 ஆயிரத்து 300 கி.மீட்டர் நீளமுள்ள யாங்ட்சே ஆறு பாய்கின்றது. வடமேற்கு சீனாவின் குவிங்கய் மாகாணத்தில் உற்பத்தியாகும் இந்த ஆறு, 10 மாகாணங்களைக் கடந்து கிழக்கு சீனாவில் உள்ள கடலில் சங்கமம் ஆகின்றது.

உலகின் 3வது நீளமான ஆறாக யாங்ட்சே கருதப்படுகின்றது. இந்த ஆற்றின் அடியில் 27 கி.மீட்டர் நீளத்துக்குச் சுரங்கம் அமைத்து, உச்சாங் - ஹாங்கு நகரங்களுக்கிடையே புதிய சுரங்க ரெயில் சேவையைத் துவங்க சீனா முடிவு செய்துள்ளது. இந்த 27 கி.மீட்டர் தூரத்தை புதிய ரெயில் சேவையின் மூலம் மூன்றே நிமிடங்களில் கடந்து விடலாம் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் ஒரு ரெயில் வீதம், நாளொன்றுக்கு 26 ரெயில்கள் இயக்கப்படும். நாளொன்றுக்கு 5 லட்சம் மக்கள் இந்த ரெயில் சேவையின் மூலம் பயனடைவார்கள் என சீன அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சி இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பீஜிங்-குவாங்ஷோ இடையில் 2 ஆயிரத்து 298 கி.மீட்டர் தூரம் அமைக்கப்பட்ட உலகின் மிக நீளமான பாதையில் நேற்று முன்தினம் மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரெயில் சேவையை வெற்றிகரமாக சீனா தொடங்கி வைத்துள்ளது                                                                                                        

நன்றி :- மாலைமலர், 28-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.