லண்டனில் உலகத் தமிழர் மாநாடு தொடங்கியது: இலங்கை போர்க்குற்றம் பற்றி விவாதம் !
பிரிட்டன் எம்.பி.க்கள் மற்றும் பிரிட்டிஷ் தமிழ் பேரவை சார்பில் லண்டனில்
இன்று மாலை உலகத்தமிழர் மாநாடு தொடங்கியது. பிரிட்டிஷ் பாராளுமன்றக்
கட்டிடத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரிட்டன் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் மற்றும் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து
தமிழர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றி இந்த மாநாட்டில்
விவாதிக்கப்பட்டு வருகிறது. போர்க்குற்றம் மட்டுமின்றி, அங்கு தமிழர்கள்
மீதான அடக்குமுறைகள் மற்றும் தமிழர்களின் அடையாளச் சின்னங்கள்
அழிக்கப்படுவது பற்றிப் பல்வேறு தலைவர்கள் எடுத்துரைக்க உள்ளனர்.
இலங்கை போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்று
தீர்மானம் நிறைவேற்றும் வகையில் நடத்தப்படும் இந்த மாநாடு 3 நாட்கள்
நடைபெறுகிறது.
நன்றி :-மாலை மலர், 07-11-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.