Saturday, November 3, 2012

புற்றுநோய் முற்றியவர்களுக்கு வலியைக் குறைக்கும் படிப்பு !

புற்றுநோய் போன்றவைகளால் பாதிக்கப்படுவர்கள் தங்களின் நோய் முற்றிய இறுதிக் கட்டத்தில், வலியால் மிகவும் வேதனைப்படுவார்கள். அத்தகைய வலியைக் குறைக்க உதவும் மருத்துவத்துறை ஒன்று இருக்கிறது. ஆங்கிலத்தில் Palliative Care எனப்படும் இந்தத் துறையில் பல வேலைவாய்ப்புக்கள் உள்ளன.

ஒரு நோயாளியினுடைய வாழ்க்கையின் மிகவும் சோகமான மற்றும் வேதனை மிகுந்த கட்டத்தில், அவரின் துயரை ஓரளவு துடைக்க உதவும் ஒரு உன்னதமான பணி இதுவாகும். இச்சேவையின் மூலம், நோயாளிக்கு மனத்தளவிலும் தைரியம் கொடுக்க முடியும். இப்படிப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கானது.

இந்த வலி நிவாரணி தொடர்பான மருத்துவத் துறையில் பணியாற்றுவது சற்றே சாவாலான விஷயம் தான். இத்துறையானது இந்தியாவில் ஆரம்பக் கட்டத்தில் இருந்தாலும், இதன் முக்கியத்துவம் நாளுக்குநாள் கூடி வருகிறது.

The Indian Association of Palliative Care (IAPC) என்ற அமைப்பானது கடந்த 1995ம் ஆண்டு நிறுவப்பட்டது.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய அரசின் ஆலோசனையில் நிறுவப்பட்ட இந்த அமைப்பானது இத்துறையில் கல்விச் செயல்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.

வழங்கப்படும் படிப்புகள்:

IAPC மற்றும் பல கல்வி நிறுவனங்கள் Palliative Care தொடர்பான பல அடிப்படைப் படிப்புகளை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்குகின்றன.

இந்தப்படிப்பு 2 வகைப்படும். முதல் பாகமானது 8 வாரங்கள் தொலைநிலைக் கல்வியைக் கொண்டது மற்றும் Palliative Care தொடர்பான அறிமுக அம்சங்களும் உண்டு.

இரண்டாம் பாகமானது விருப்பப்பட்ட கிளீனிக்கில், Palliative Care படிப்பில் Communication skills. Psychological Issues. Ethical and Spiritual Issues. Pain Management. Symptom management. Bereaement Counselling, Palliative Care emergencies. End of life care and Practical issues related to death போன்றவையும் அடங்கும்.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

Institute of Palliative Medicine (AIIMS), Delhi

Institute of Palliative Medicine (Calicut)

TMCH (Mumbai), Bangalore Baptist Hospital. IPC (Thrissur)
                                                            


நன்றி :- தினமணி, 03-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.