Friday, November 16, 2012

குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்த பிளஸ்-2 மாணவர் - மதுபானம் விற்ற ஊழியர் கைது !



சோழவந்தானில் குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்த பிளஸ்-2 மாணவர் - மதுபானம் விற்ற ஊழியர் கைது

மதுரை மாவட்டம் சோழவந்தான் போலீஸ் சரகத்திற்குட்பட்டது மேலக்கால். இங்குள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிப்பவர் விஜய் (வயது 17). சின்ன இரும்பாடியை சேர்ந்த இவர் சம்பவத்தன்று பள்ளிக்கு மது அருந்தி வந்துள்ளார். இதனைக் கண்ட ஆசிரியர் தலைமை ஆசிரியைக்குத் தகவல் கொடுத்தார். இதன்பேரில் தலைமை ஆசிரியை சாந்தி, சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீசார் மாணவர் விஜயிடம் விசாரணை நடத்தியபோது மேலக்கால் பகுதி அரசு மதுபானக் கடையில் மது வாங்கியிருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட மதுக்கடைக்கு சென்ற போலீசார் அங்கிருந்த விற்பனையாளர் முருகேசனைக் கைது செய்தனர். 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு மது விற்றதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு இது போன்ற மது விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ள போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், பெற்றோர் தங்கள் பிள்ளைகள் இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கண்காணிக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.                                                                               

நன்றி :- மாலைமலர், 16-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.