பரபரப்பான தகவல்களை வெளியிடும் தொலைக்காட்சியே இன்று பல்வேறு தொலைக்காட்சிகளில் பரபரப்புச் செய்தியாக மாறியுள்ளது.
காங்கிரஸ் கட்சி பற்றிய குற்றச்சாட்டுக்கள் குறித்த விவரங்களைத் தங்களது தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க, ஸீ டிவி எடிட்டர் பேரம் பேசிய வீடியோ காட்சியை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் ஜிண்டால் இன்று வெளியிட்டுள்ளார்.
இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த நவீன் ஜிண்டால், ஸீ டிவி எடிட்டர் தன்னை சந்தித்து, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் குறித்து செய்திகளை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.100 கோடியைத் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று பேரம் பேசியதாகக் கூறினார்.
இதையடுத்து, செய்தியாளர்கள் கூட்டத்தில் மிகுந்த பரபரப்பு எழுந்தது.
இதற்கிடையே, ஸீ டிவி எடிட்டர் பேரம் பேசும் போது எடுத்த ஆடியோவுடன் கூடிய வீடியோ ஆதாரத்தையும் ஜிண்டால் வெளியிட்டதை அடுத்து பரபரப்பு அதிகரித்துள்ளது.
வெளிவரும் செய்திகளே மிகவும் குறைவு . அதிலும் ஊடகங்கள் தடம்புரண்டால் !
நன்றி :-தினமணி, 25-10-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.