Saturday, September 1, 2012

தகவல் ஆணையத்திற்குப் புதிய 5 ஆணையர்கள் நியமனம்!


.
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான குழு மாநிலத்

தகவல் ஆணையத்திற்கு  5 பேர்களை பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து

தமிழகக் கவர்னர் ரோசய்யா 5 புதிய ஆணையர்களை இன்று நியமித்துள்ளார்.
.
இதுகுறித்து அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கவர்னருக்கு வழங்கப்பட்ட

அதிகாரத்தின் கீழ் தகவல் ஆணையத்திற்கு 5 புதிய ஆணையர்களை தமிழக

கவர்னர் நியமித்து இருக்கிறார்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:

 டாக்டர். வி.சரோஜா,

கிறிஸ்டோபர் நெல்சன், ஐபிஎஸ் (ஓய்வு), 

பி.தமிழ்ச்செல்வன், 

பி.நீலாம்பிகை, 

எஸ்.எப்.அக்பர். 

இவர்கள் பதவியேற்றது முதல் 5 ஆண்டு காலம் அல்லது 65 வயது வரை 

இப்பதவியை வகிப்பார்கள். 

இவ்வாறு அரசு முதன்மைச் செயலாளர் எம்.குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள

செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறார். உயர்நீதிமன் றத்தில் சி.மனோகரன்,

ஏ.ஆறுமுக நயினார் தொடர்ந்துள்ள வழக்கின் முடிவுக்கு ஏற்ப இந்த நியமனம்

அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி:- மாலைச் சுடர், 01-09-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.