Tuesday, August 14, 2012

பூமிக்கு அடியில் 10 ஆண்டுகள் வசித்தோர், மற்றும் சூரிய வெளிச்சத்தையே காணாத குழந்தைகள் மீட்பு!

இந்தியாவில்  அல்ல.  மாஸ்கோவிலிருந்து  நூறு கிலோ மீட்டர்  தொலைவில்

உள்ளது கசன் நகரம்.இப்பகுதியில் வாழ்வோரில் முஸ்லீம்களே அதிகம்.

இங்கு வசித்த 83 வயதான பயஸ்ரஹ்மான் சத்தரோவ் என்பவர் தன்னை

இறைத் தூதராக அறிவித்துக் கொண்டார்..

இவர் சன்னி முஸ்லீம் பிரிவினைச் சேர்ந்தவர். 1970 ஆம் ஆண்டு முதல்

தனக்கென ஓர் பாதையை வகுத்துக் கொண்டார்.தன்னுடைய

ஆதரவாளர்களையும் வழி நடத்தி வந்தார்.

கசன் பகுதியில் உள்ள தனது எட்டு அடுக்கு மாளிகையைத் தன்னுடைய

இராஜ்ஜியமாக  அறிவித்தார். அவரது ஆதரவாளர்களை அந்தக் கட்டடத்துக்கு

உள்ளே இருந்து  வெளியேறத் தடை விதித்தார்.

இந்தக் கட்டடத்தின் பதுங்கு குழியில் கடந்த பத்து ஆண்டுகளாக 70 பேர்

கொண்ட குடும்பத்துடன் வசித்து வந்தது தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குடும்பத்தில் உள்ள 20 குழந்தைகள் பிறந்தது முதல் சூரிய

வெளிச்சத்தையே பார்த்ததில்லை. இந்தக் குடும்பத்தில் உள்ள 17 வயதுப்

பெண் தற்பொழுது கர்ப்பமாக உள்ளார்.

இவர்கள் அனைவரும் தற்பொழுது மீட்கப் பட்டுள்ளனர். மருத்துவ உதவியோ,

கல்வி அறிவையோ அளிக்காத இக்குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்ய

போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

நன்றி:-ஜனசக்தி,12-08-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.