Sunday, July 15, 2012

சிவத் தொண்டில் ஆஸ்திரேலிய ஓவியர்! -தினமணி


-சா. சரவணப்பெருமாள்-
First Published : 15 Jul 2012 12:13:00 AM IST

: திருவண்ணாமலை, அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சிவபெருமானுக்கு தொண்டு செய்து வருகிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஓவியர்.

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் சன்யாடா (54). சிவபெருமானின் தீவிர பக்தரான இவர், அவ்வப்போது திருவண்ணாமலைக்கு வந்து செல்வது வழக்கமாம்

அண்மையில் திருவண்ணாமலை வந்தபோது அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகளில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார். 

அடி அண்ணாமலை மற்றும் அதற்கு பக்கத்தில் உள்ள மாணிக்கவாசகர் கோயில்களில் ஓவியம் தீட்டும் பணியில் இப்போது ஈடுபட்டு வருகிறார். அடி அண்ணாமலை பகுதியிலேயே தங்கியுள்ள இவர், கிராம மக்கள் கொடுக்கும் உணவையே உண்டு பசியை போக்கிக்கொள்கிறார்.


இதுகுறித்து, சன்யாடா கூறியது: நான் சிவபெருமானின் தீவிர பக்தன். அண்மையில் திருவண்ணாமலை வந்தபோது, இக் கோயிலின் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெறுவதை அறிந்தேன்.

 சிவபெருமானுக்கு என்னால் முடிந்த தொண்டாக இக்கோயிலில் ஓவியம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளேன். எங்கள் ஊரில் ஓவியம் தீட்டி பல ஆயிரங்களை சம்பாதிப்பதைக் காட்டிலும், இங்கு ஓவியம் தீட்டுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

 3 மாதங்களாக திருவண்ணாமலையில் தங்கி இருக்கிறேன். கும்பாபிஷேகப் பணிகள் முடிந்தவுடன் ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டுள்ளேன் என்றார். இடது கை பழக்கம் கொண்ட சன்யாடா, மாணிக்கவாசகர் கோயிலில் தீட்டி  வரும் ஓவியங்கள் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்து வருகின்றன...

0 comments:

Post a Comment

Kindly post a comment.